districts

img

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

நாமக்கல், ஜூன் 3-  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கலைஞர் கரு ணாநிதியின் 101 ஆவது பிறந்த நாளை ஒட்டி நாமக்கலில் பல  இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கலைஞர் கரு ணாநிதியின் 101 வது பிறந்த நாளை ஒட்டி, நகர திமுக சார்பில்  பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்ப டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா  செந்தில் தலைமையில் திமுக முன்னணியினர் மாலை அணி வித்து மரியாதை செய்தனர்.  இதேபோல் நகராட்சி வளாகத்தின் முன்புறம் அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்ப டத்திற்கு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை யில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா  செந்தில், நகர் மன்ற உறுப்பினர்கள்மற்றும் திமுக முன்னணி யினர் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில், நூற்றுக்க ணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலகம்  முன்பு பேருந்துகளில் இரு சக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு இனிப்புகளை வழங்கினார்.