districts

img

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்களை கைது செய்திடுக

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் சேலம், ஏப்.3- மாணவிகளிடம் அத்துமீறிய கலா ஷேத்ரா கல்லூரி பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எடப்பாடி அடுத்த ஆடையூர் கிரா மம் வண்ணாங்குட்டை பகுதியில், இரண்டு தலித் பெண்களை அரை நிர் வாணப்படுத்தி தாக்கியவரை வன்கொ டுமை சட்டத்தில் கைது செய்ய வேண் டும். மாணவிகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேரையும் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப் பட்டது.  மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர். வைரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலா ளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட பொருளா ளர் டி. பெருமா, மாதர் சங்க நிர்வாகி ஜி. கவிதா உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்றனர்.