districts

img

மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாக்குவாதம்

நாமக்கல், ஆக.26-  புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு அரிசி  மூட்டைகளை இறக்குவதால் மூட்டை தூக்கும் தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பகுதிக்கு தொழிற்சாலைகளுக்கு, ஜவுளி குடோன்களுக்கு, பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் சென்று,  மூட்டை பாரங்களை இறக்கியும், ஏற்றியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், ஞாயிறன்று  பள்ளிபாளையம் தனியார் அரிசி கடை ஒன்றில், வெளி மாநில தொழிலாளர்களைக் கொண்டு அரிசி மூட்டைகளை இறக்குவதாக உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத் தது. இதனையடுத்து உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலா ளர்கள், தனியார் அரிசி கடையை முற்றுகையிட்டனர். இப்படி வெளி மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை செய்வதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என அரிசி கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக அங்கு அசாதாரண சூழல் ஏற் படவே, தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார், இருதரப் பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சமா தானப்படுத்தி அனுப்பினர்.