இரு தரப்பினரிடையே வாக்குவாதம் கோவில் நிலம் ஏலம் ஒத்திவைப்பு
மேட்டுப்பாளையம், ஜன.19- மேட்டுப்பாளையம் கோட்டை மாரியம்மன் கோவில் நிலம் ஏலத்தின் போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏலத்தை ஒத்தி வைத்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோட்டை கரிய மாரியம்மன் கோவில் உள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள 33 கிராம மக்களின் வழிபாட்டு தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு சொந்தமாக 17.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்து அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் நிலத்தை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கோவிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால், தலைமுறை தலை முறையாக கோவிலை பராமரித்து வரும் பூசாரிகளுக்கென இந்த கோவில் நிலம் ஒதுக்கப்பட்டு சம்பளம் ஏதும் வழங்கப் படாத இவர்களுக்கு அந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தை ஏலம் விடக்கூடாது என ஒரு தரப்பி னரும், பயன்படுத்தபடாமல் உள்ள கோவில் நிலத்தை ஏலம் விட்டு அவ்வருவாயை கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறிவருவதாக தெரி கிறது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் காவல்துறை பாது காப்புடன் இந்து அறநிலையத்துறை அதிகாரி ஹேமலதா முன்னிலையில் கோவில் நிலத்தை ஏலம் விடுவதற்கான பணிகள் துவங்கியது. அப்போது, இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிராம மக்கள் அறியும் வகையில் முறையான முன்னறிவிப்பு ஏதுமின்றி இந்த ஏலம் நடைபெறுவது ஏற்கதக்கதல்ல என்றும் ஊர் மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையடுத்து கோவில் நிலம் தொடர்பான ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யபடுவதாக இந்து அறநிலை யத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மேலும், பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஏலத்தை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவித்தனர்.
கருப்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரம்
ஈரோடு, ஜன.19- தாளவாடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்ட கருப்பன் யானை தோட்டத்தில் புகுந்த நிலையில், வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச் சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீரை தேடி அவ்வப்போது விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து விடுகின்றன. இதில், குறிப்பாக கருப்பன் என்ற யானை அடிக்கடி வனத்திலிருந்து வெளியேறி பயிர்களை சேதம் செய்து வந்தது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகளை வர வழைத்தார்கள். மேலும் மருத்துவர்களுடன் சேர்ந்து வனத் துறை குழுவும் உருவாக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 14ஆம் தேதி அதிகாலை இரிய புரத்தில் உள்ள தேவராஜ் என்பவருடைய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. உடனே கும்கி யானைகள் சுற்றி வளைக்க, மருத்துவ குழுவினர் கருப்பன் யானை மீது துப்பாக்கி மூலம் 2 மயக்க ஊசிகளை செலுத்தினார்கள். ஆனால் அரைகுறை மயக்கத்திலேயே கருப்பன் யானை தப்பி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில், புதனன்று இரவு 9 மணி அளவில் ஜீர்கள்ளி வனச்சரகத் துக்கு உட்பட்ட கல்மாண்டிபுரம் கனகராஜ் என்பவர் தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. உடனே தயார் நிலையில் இருந்த குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும், மயக்க ஊசி செலுத்தி கருப்பனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜன. 19- கோவை புறநகர் சூலூ ரில், தமிழகத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மாற்றக் கூறி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு ஆளு நருக்கு எதிராக முழக்கங் கள் எழுப்பினர். கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி எம் சி மனோகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், இறையாண்மைக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரின் போக்கை கண்டித்தும், சட்டமன்றத் தில் ஆளுநர் நடந்து கொண்ட விதத்தை கண் டித்தும், ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு உள்ளிட்ட மசோ தாக்களுக்கு அனுமதி தரா மல் இருக்கும் ஆளுநரை கண்டித்தும் கண்டன முழக் கங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் எனவும், ஒன்றிய அரசுக்கு கோரிக்கை முழக்கங்களையும் எழுப் பினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி யினர் கலந்து கொண்டனர்.
கூடலூரில் 2 காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலா? என ஆய்வு
உதகை, ஜன.19- இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், கூட லூரில் தற்போது 2 காட்டுப்பன்றிகள் உயிரிழந்தது குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. அதன் உடல்களை கைப்பற்றி கால்நடை மருத்துவ குழு வினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், இறந்த 28 காட்டு பன்றிகளின் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக் கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக் காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி காட்டுப்பன்றிகள் இறந்தது உறுதி யானது. இதையடுத்து வனத்துறை யினர், கால்நடை பராமரிப்பு துறை யினர் வளர்ப்பு பன்றி பண்ணைகளில் ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், தமிழ்நாடு மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, காட்டுப் பன்றிகள் உயிரிழப்பு கட்டுப்படுத்தப் பட்டது. இதன்பின் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலை யில் நடு கூடலூர், ஆனைசெத்த கொல்லி பகுதியில் 2 ஆண் காட்டுப் பன்றிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் (பொ) யுவராஜ் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு உடல் களை கைப்பற்றினர். இதன்பின் கால் நடை பராமரிப்பு துறையினர் உதவி யுடன் பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய உடற் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னரே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி உயிரிழந்ததா? என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
கழிவறைக்குள் சிக்கிய காட்டெருமை
உதகை, ஜன. 19- குன்னூர் தபால் நிலைய கழிவறைக்குள் காட்டெ ருமை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், குன் னூரில் காட்டெருமை களின் நடமாட்டம் அதி கரித்து காணப்படுகிறது. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. இந்நிலையில் பேரக்ஸ் பகுதியில் உள்ள தபால் நிலைய கழிவறைக் குள் காட்டெருமை சிக்கி இருப்பதை தபால் ஊழியர் கள் கண்டு அதிர்ச்சியடைந் தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சென்று காட்டெ ருமை செல்ல ஏதுவாக கதவை திறந்து வழி ஏற்படுத்தி மீட்டனர்.
எருக்கல்மேடு குட்டையில் நீர் நிரப்பக்கோரி ஜன. 23 காத்திருக்கும் போராட்டம்
திருப்பூர், ஜன.19- சொக்கனூர் ஊராட்சி, எருக்கல்மேடு குட்டையில் அமைக் கப்பட்டு இருந்த ஓ எம் எஸ் கருவிகளை திருப்பி எடுத்துச் சென்றதை கண்டித்து அவிநாசி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஜனவரி 23 ஆம் தேதி காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் அறிவித்துள்ளனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, சொக்கனூர் ஊராட்சி 296/ 2 காட்டுபாளையம் எருக்கல்மேடு குட்டையில் அமைக்கப்பட்டு இருந்த ஓ எம் எஸ் கருவிகளை திருப்பி எடுத் துச் சென்றதை, உடனடியாக பொருத்தி நீர் நிரப்பக்கோரி ஜன.23 ஆம் தேதியன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு ஒன்றியக்குழு, அவிநாசி கண்காணிப்பு பொறியா ளர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட முகாம்கள்
திருப்பூர், ஜன. 19 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர் முகாம்கள் சனி யன்று (நாளை) நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற் றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் தொடர்பான கோரிக் கைகளுக்காக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அவிநாசி வேலாயுதம்பாளையம், தாராபுரம் மனக்க டவு, காங்கேயம் பச்சாபாளையம், மடத்துக்குளம் கொழுமம், பல்லடம் புளியம்பட்டி, திருப்பூர் வடக்கு கணக்கம்பாளை யம், திருப்பூர் தெற்கு குப்பாண்டம்பாளையம், உடுமலை பேட்டை குறுஞ்சேரி, ஊத்துக்குளி செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சனியன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில் அனைத்து குடி மைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலு வலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பார்கள் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை தொழில் முனைவோர் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு
திருப்பூர், ஜன. 19 - புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவ னங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: படித்த முதல் தலைமுறையி னரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவிகித மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீத மானி யத்துடன் கூடுதலாக 10 சதவீதம் மானியம் (அதிகபட்ச உச்சவ ரம்பு ரூ.75 லட்சம்) வழங்கப்படும். மேலும் அனைத்து பிரிவி னருக்கும் 3 சதவிகித பின்முனை வட்டி மானியமும் வழங்கப்ப டும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண் டும். பெண்கள், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பி னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையி னர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தின ஆகிய சிறப்பு பிரிவினருக்கு வயது 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு, பட்டபடிப்பு, பட்டயபடிப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற் சார் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் இத்திட்டத்தின் கீழ் உடன் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொது பிரிவு பயனாளி கள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகி தம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் 5 சதவிகி தம் தங்கள் பங்காக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனை வோர் (www.msmeonline.tn.gov.in/needs) என்ற இணை யதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் (0421- 2475007, 9500713022) என்ற முகவரியில் தொடர்பு கொள் ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் பிடிபட்ட கும்பல் இந்தியா முழுவதும் கைவரிசை
திருப்பூர், ஜன. 19 – ஆன்லைன் கடன் செயலி மூலம் மோச டியில் ஈடுபட்டு சைபர் கிரைம் காவல் துறை யிடம் சிக்கிய கும்பல் இந்தியா முழு வதும் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், பொங்குபாளையத்தை சேர்ந்த பெண் ஆன் லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றதும், கடன் தொகையை செலுத்திய பிறகும் ஆன் லைன் செயலி மூலம் ஒரு கும்பல் ஆபாச படங் களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக காவல் துறைக்குப் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீ சார் விசாரித்தனர். இந்த விசாரணையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட் பட்ட காதர்பேட்டை அருகே அறை எடுத்து கால் சென்டர் அமைத்து ஒரு கும்பல் குற்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முக மது அஸ்கர், (24), முகமது ஷாபி(36), முகமது சலீம் (37), அனீஷ் மோன் (33) மற்றும் அஸ்ரப் (46) ஆகியோர் கைது செய்யப்பட் டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டு கடன் செயலி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு கடன் வழங்குவதாகவும், புகைப் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய ஹைடெக்கான 11 சிம் பாக்ஸ், 500 சிம் கார்டு கள், 6 மோடம், 3 லேப்டாப், யு.பி.எஸ்., மற்றும் பேட்டரி, 20 ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், யூரோ டாலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந் தியா முழுவதும் 200 பேரின் புகைப்படங் களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளி யிட்டு பண மோசடியில் ஈடுபட்ட தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இதில் மோசடி நபர்கள் பலர் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண், ஐ.எம்.இ., உள்ளிட்ட விப ரங்களை தில்லியில் உள்ள தேசிய சைபர் கிரைமிடம் ஒப்படைத்து முதல் கட்டமாக விசா ரிக்கப்பட்டது. அதில் மேற்கொண்ட விபரங் கள் 200 மோசடி புகார்களில் பொருந்துவது தெரிய வந்துள்ளது. 200 பேரின் ஆபாச படங் களை வெளியிட்டு பணம் பறித்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தது கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவரின் உண்மையான பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த நபர் மூலமாகவே திருப்பூர் தேர்ந் தெடுக்கப்பட்டு சிம் பாக்ஸ், சிம் கார்டு மாற்று வது உட்பட அனைத்து உத்தரவுகளையும் இக்கும்பல் பெற்று செயல்படுத்தி வந்துள் ளனர். எனவே மோசடி கும்பலுக்கு தலைமை ஏற்று செயல்பட்டவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ரூ.4 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
திருப்பூர், ஜன. 19 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், உத்தமபாளை யத்தில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம் உத்தமபாளையம் கிராமம் புல எண் 442/5 ல் 0.62.00442/7ல்0.93.00, 443/2ல் 0.85.00, 442/Aல்5.95.5 ஹெக் டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆணையர் மற்றும் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி நிலங்களை ஆய்வு மேற்கண்ட போது, மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலம், 5 ஆக்கிரமிப்பு தாரர்கள் வசம் இருந்தது. இந்த நிலங்கள் திருப் பூர் இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் தனி வட்டாட் சியர் ஆலய நிலங்கள், திருக்கோயில் தக்கார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில் வியாழனன்று ஆக்கிரமிப்பு தாரர்களிடம் இருந்து திருக்கோயில் வசம் சுவாதீ னம் எடுக்கப்பட்டது. 20.63 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 4 கோடி ஆகும்.
தமிழர் கலாச்சாரப் பெருவிழா பரிசு வழங்கல்
அவிநாசி, ஜன.19- தமிழர் திருநாள் பொங்கல் விழாவையொட்டி, நடை பெற்ற கலாச்சாரப் பெருவிழாவில் கலைஞர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழர் பண்பாடு கலச்சாரப் பேரவை சார்பில் திருமுரு கன்பூண்டி அம்மாபாளையம் தனியார் மண்டபத்தில் கலாச் சாரப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்நிகழச்சிக்கு த.ப.க அமைப்பின் தலைவர் கா.நடராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனிச்சாமி, கோபாலகிருஷ்ணன், சுவாமி நாதன், செயலாளர் வெங்கடாசலம், அருணாசலம், முருகே சன், பொது செயலாளர் சுப்பிரமணியம், பொறுப்பாளர்கள் முத்து அவிநாசியப்பன், பொன்னுசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு பொதுப் பொங் கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. இதை யடுத்து ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட் டம், கரகாட்டம், பண்ணும் பரதமும் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக இரவு கலைஞர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்கு பரிகள் வழங்கப் பட்டது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.41/60அடி நீர்வரத்து:818கன அடி வெளியேற்றம்:902கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 80.94/90அடி. நீர்வரத்து:108கனஅடி வெளியேற்றம்:909கன அடி
பிளேடால் அறுத்து கொண்ட தம்பதி
திருப்பூர், ஜன. 19 - நீதிமன்ற வளாகத்தில் கணவன், மனைவி பிளே டால் அறுத்துக் கொண்டு தற் கொலை முயற்சி செய்த னர். திருட்டு வழக்கில் தொடர் புடைய, மதுரையை சேர்ந்த கருப்பசாமி (29) என்பவர் வியாழனன்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தை களுடன் பல்லடம் நீதிமன் றத்தில் ஆஜரானார். அங்கு தாமதம் ஏற்பட்டதால் ஆத்தி ரமடைந்த கருப்புசாமி பிளே டால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். அவரது மனை வியும் தனது கையை அறுத் துக் கொண்டார். காவல் துறை யினர் கோவை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடத்தில் விவசாயிகள் சங்கப் பேரவை
திருப்பூர், ஜன. 19 - அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35ஆவது மாநாடு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநாடு முடிவுகள் விளக்கப் பேரவை கூட்டம் பல்லடத்தில் நடைபெற் றது. பல்லடம் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் வியாழனன்று நடைபெற்ற இப்பேரவைக் கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். மாநாட்டு முடிவுகளை விளக்கி மத்தியக்குழு உறுப்பினர் பி.பெருமாள் உரையாற்றினார். இக்கூட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு, தெற்கு கமிட்டிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பல் லடம் ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரமணியன் நன்றி தெரிவித் தார்.
மானிய வாடகையில் வேளாண் கருவிகள்
திருப்பூர், ஜன. 19 - திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவி களை மானிய வாடகையில் சிறு, குறு விவசாயிகள் பெற்று பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியிருக்கிறார். மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் உபகோட்ட அலுவ லக உதவி செயற்பொறியா ளர் ஆர்.சுப்பிரமணியன் அலைபேசி எண்.9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஆர்.ராஜேந்திரன் அலைபேசி எண்.7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் முத்துரா மலிங்கம் அலைபேசி எண் 9865497731-னை தொடர்பு கொள்ளலாம்.
வேலை வாங்கி தருவதாக பண மோசடி கணவர் கைது; மனைவி தலைமறைவு
கோவை, ஜன.19- வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தம்பதியினர் மீது கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இத னையடுத்து, கணவரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள மனைவியை தேடி வருகின்றனர். கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (33). இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் எம்.எஸ்.சி கம்பியூட்டர் நெட்வொர்ங் படித்து முடித்துள்ளார். தற்போது கோவையில் வீட்டில் இருந்த வாறு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சந்திரமோ கன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முயற்சி செய்துவந்தார். அப்போது பேஸ்புக்கில் ஒரு விளம் பரம் வந்தது. இதை நம்பி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த நிறுவனத்தில் உரிமையாளர்களான அருண் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர், சந்திரமோகனிடம் போலந்து நாட்டில் வேலை உள்ளதாகவும், அங்கு செல்ல ரூ.4 லட்சம் வரை செலவாகும் என கூறினர். மேலும், முன் பண மாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பணியாணை வந்த பிறகு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளனர். இதனையடுத்து, சந்திரமோகன் இரண்டு தவணை களாக ரூ.1 லட்சம் பணத்தை அருண் மற்றும் ஹேமலதா தம் பதியிடம் வழங்கியுள்ளார். பின்னர் அவர்களிடம் வேலைக் கான பணியாணை குறித்து கேட்ட போது விரைவில் அழைப்பு வரும் என தொடர்ந்து கூறி வந்தனர். கடந்த ஓராண்டாக நேரில் சென்றும் முறையான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்ற சந்திர மோகன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர். இதையடுத்து சந்திரமோகன் பல்வேறு நபர்களிடம் விசா ரித்தார். அப்போது இவரை போலவே பலர் ஏமாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் கும்பகோணத்தை சேர்ந்த அமுதபிரியன் ரூ.1 லட்சம், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் ரூ.4.54 லட்சம், திருவள்ளூர் பொன் னேரியை சேர்ந்தவர் சரவணன் ரூ.1 லட்சம், சிலம்பரத்தை சேர்ந்த முகமது ஜவகர் அலி ரூ.4.50 லட்சம், சேலம் மாவட் டத்தை சேர்ந்த முத்துகுமார் ரூ.1 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அகமது யாசர் ரூ.1 லட்சம், நாகர்கோவிலை சேர்ந்த பெஜாட்ச் ரூ.2 லட்சம் அரியலூர் புகழேந்தி மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகி யோர் ரூ. 3.18 லட்சம் என மொத்தம் ரூ. 19.22 லட்சம் பணத்தை பெற்று இந்த தம்பதியினர் மோசடி செய்தது சந்திரமோ கனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து சந்திரமோகன் மாநகர குற்றப்பிரிவு போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அருண் மற் றும் ஹேமலதா தம்பதினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடி யில் ஈடுபட்ட அருணை போலீசார் கைது செய்துள்ளனர். அவ ரது மனைவி ஹேமலதா தலைமறைவானார். அவரை போலீ சார் தேடி வருகின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நாமக்கல், ஜன.19- காரீப் பருவத்திற்காக விவசாயிகளிடமிருந்து நெல் கொள் முதல் செய்வதற்கு வசதியாக குமாரபாளையம் அருகில் நேரடி கொள்முதல் நிலையம் புதனன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் திறந்து வைத்தார். நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து ஆட்சி யர் ஸ்ரேயா பி.சிங் கூறுகையில், காரீப் பருவத்திற்காக விவ சாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கிரேட்-ஏ ரகம் நெல்லுக்கு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,060ம், ஊக்கத்தொகையாக ரூ.100 என மொத்தம் ரூ.2,160 கொள் முதல் விலையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது ரக நெல் ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,040, ஊக்கத்தொகை ரூ.75 என மொத்தம் ரூ.2,115 கொள்முதல் விலையாக வழங்கப்படும். நடப்பாண்டு காரீப் பருவத்தில் (2022-2023) எலந்தகுட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தின சரி 800 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படலாம். நெல் கொள்முதல் செய்யப்பட்ட மூன்று வேலை நாட்களில் விவ சாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். விவசாயி கள் நலன் கருதி திறக்கப்பட்டுள்ள இக்கொள்முதல் நிலை யத்தினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
விவசாய நிலத்தில் கிடைத்த புலிக்குத்தி நடுகல்
ஈரோடு, ஜன.19- ஈரோடு அருகே விவசாயத் தோட்டத்தில் பழமை வாய்ந்த 2 புலிக்குத்தி நடுகல், நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் சிலையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத் துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமத் தைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கு சொந்த மான விவசாய தோட்டத்தில் புகையிலை சாகுபடி ஈடுபட்டுள்ளார். அப்போது தோட்ட வேலையின் போது கல்லினால் ஆன இரண்டு புலிக்குத்தி நடுகல் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதை முனுசாமி கண்டுள்ளார். சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி யுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் நடமாட்டம் இருந்துள்ளது. இப்புலிகள், கால்நடைகளை வேட்டையாடிய போது இப்பகுதியிலுள்ள வீரர்கள் சண்டை யிட்டு இறந்ததால் அதன் நினைவாக இது போன்ற புலி குத்தி நடுகற்கள் நடப்பட்டுள்ள தாக தெரிகிறது. ஒரு நடுகல்லில் புலியை வீரர் ஒருவர் குத் துவது போன்றும், அதில் வேட்டை நாய்கள் மற்றும் வீரரின் மனைவி போன்ற உருவங்க ளும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு நடுகல் லில் கூர்வாளால் புலியை குத்துவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்
உதகை, ஜன.19- மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்திற் குள் உலா வரும் காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே மெரி லேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம் ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங் களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலை யில் சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகி றது. குறிப்பாக காட்டுடெருமைகளின் நட மாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேற் கண்ட கிராமங்களில் விவசாயிகள் உருளை கிழங்கு, கேரட் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விளை நிலங்களில் காட்டெருமைகள் கூட்டம், கூட்ட மாக புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரு கின்றன. இந்நிலையில், மஞ்சூர் அருகே மெரி லேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட் டத்தில் தொழிலாளர் சிலர் தேயிலை பறித்து கொண்டிருந்தபோது, 10க்கும் மேற்பட்ட காட் டெருமைகள் கூட்டமாக தேயிலை தோட்டத் திற்குள் புகுந்தது. இதைக்கண்ட தொழிலா ளர்கள் தேயிலை பறிப்பதை விட்டு தோட் டத்தில் இருந்து வெளியேறினர். எனவே, நாளுக்குநாள் அதிகரித்து வரும் வனவிலங் குகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப் படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் மோதி வாலிபர் பலி
கோவை, ஜன.19- கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, உயிரிழந்த கிடந்த நபர் மஞ்சள், சிவப்பு நிற சட்டை அணிந்திருந்தார். அவரது இடது பக்க மார்பு மற்றும் இடுப்பில் மச்சம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேர்பெட்டா சாலையில் கரடி உலா: வாகன ஓட்டிகள் அச்சம்
உதகை, ஜன.19- கோத்தகிரியில் டானிங்டன் பகுதி யில் இருந்து கேர்பெட்டா செல்லும் சாலையின் குறுக்கே இரவு நேரத்தில் கரடி ஒன்று உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற் றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதிக ளிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் கரடிகள் குடியி ருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் தொடர்ந்து உலா வநத வண்ணம் உள் ளன. இவைகள், தேயிலை தோட்டங்க ளில் முகாமிட்டு வருவது வாடிக்கை யாகி வருகிறது. இந்நிலையில் கோத்த கிரி டானிங்டனில் இருந்து கேர்பெட்டா செல்லும் குறுகிய சாலையின் நடுவே கரடி ஒன்று உலா வந்த வண்ணம் இருந் ததைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்ச மடைந்து சற்று தொலைவிலேயே தங்க ளது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத் தினர். சற்று நேரம் சாலையிலேயே உலா வந்த கரடி, பின்னர் அருகிலிருந்த தேயிலை தோட்டதிற்குள் சென்று மறைந் தது. அதற்கு பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்த புறப்பட்டுச் சென்றனர். வனத் துறையினர் இப்பகுதியில் கண்கா ணிப்பு பனியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
உதகையில் 1.6 டிகிரி செல்சியஸ்: மக்கள் அவதி
உதகை, ஜன.19- நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உதகையில் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள் ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவ தியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோ றும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங் களில் பனிக்காலம் நிலவும். குளுமை யான காலநிலை நிலவும் உதகையில் கடந்த மாதம் இறுதியிலிருந்து உறை பனியின் தாக்கம் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிந்து வருகிறது. இத னால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது. உதகை தாவர வியல் பூங்கா, ரயில் நிலைய வளா கம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று காலை உறைபனியின் தாக்கம் அதிகமா கவே இருந்தது. அந்த பகுதிகளில் உள்ள பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. மரங்கள், செடிகள், கொடிகளிலும் உறைபனி படர்ந்திருந் தது. இதுதவிர வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங் கள் மீது பனிக்கட்டி உறைந்திருந்தது. உதகையில் வெள்ளியன்று அதிக பட்சமாக 23.9 டிகிரி செல்சியசும், குறைந் தபட்சமாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகி இருந்தது. உறை பனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரிலிருந்து தப்பிக்க. ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவர்ட்டர், மப்புலர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குன்னூர், கோத்தகிரி, பர்லியார், கொடநாடு, ஒட்டுப்பட்டறை, வண்டிச் சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் உறை பனியின் தாக்கம் காணப்பட்டது. அதி காலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
காலமானார்
ஈரோடு, ஜன.19- சிபிஎம் ஈரோடு தாலுகா, கே.துரைராஜ் நகர் கிளை உறுப்பினர் திலகம் (85) வியா ழனன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியில் 1996 ஆம் ஆண்டு இனைந்தார். மாதர் சங்கத்திலும் தன்னை இணைத்து கொண்டு பல் வேறு இயக்கங்களில் பங் கேற்று வந்தார். முதுமை மற் றும் உடல்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய் வில் இருந்தவர், வியாழனன்று காலமானார். இவரது மகன் ராஜா கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், இவரது சகோதரி கட்சி உறுப்பினராக உள்ளாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.