கோவை, அக்.17- தமிழக அரசின் தன்னிச்சையான போனஸ் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டுபேர உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியுவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தன்னிச்சையாக 10 சதம் போனஸ் என்று அறிவிப்பை வெளியிட்டது. தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும். கூட்டுபேர உரிமையை மறுக்கக்கூடாது. அனைத்து தமிழக அரசு பொதுத்துறை தொழிலாளர்களுக்கு 40 சதம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செய லாளர் ஏ.ஜான்அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். இதில், கோரிக்கைகள் குறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங் கத்தின் பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் குடிநீர் சரவணன், இன்ஜினியரிங் சி.துரைசாமி, மின்வாரியம் கோபால், தங்கநகை சந்திரன், போக்குவரத்து வேளாங்கன்னி ராஜ், ஊரகவளர்ச்சி ரத்தினகுமார், பாதுகா வலர் சங்க என்.செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில் டாஸ்மாக் ஊழியர் சங்க பொருளாளர் ராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் டி.லெனின் மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில், சிஐ டியு மாவட்ட தலைவர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, அரசு போக்குவரத்து எஸ்.சண்முகம், சி.முரளி, குடி நீர் சங்கர், ஊரக வளர்ச்சி வெங்கட்ராமன், சர்க்கரை ஆலை மாது, பஞ்சாலை கண்ணதாசன், டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். சிஐடியு மாவட்ட துணை தலைவர் சி.ரகு பதி நன்றி கூறினார்.
ஈரோடு
தமிழக அரசின் தன்னிச்சையான போனஸ் அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் சிஐடியு சார்பில் ஈரோடு, கனிராவுத்தர்குளம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.குண சேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.சி. பிரகாசம், பொருளாளர் ஜி.செந்தில்குமார், மாநில செயற் குழு உறுப்பினர் கே.கே.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.