districts

img

நெருங்கும் தீபாவளி: ஜவுளிக்கடையில் அலைமோதும் மக்கள்!

நாமக்கல், அக்.20- தீபாவளி பண்டிகைக்கு இன் னும் சில தினங்களே உள்ள நிலை யில், ஜவுளிக்கடைகளில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி, ஜவுளிக்கடைகளில் அதிகளவு  துணிகள் இருப்பு வைக்கப்பட்டுள் ளன. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையம் என்பது, விசைத்தறித் தொழிலாளர்கள், அன்றாடம் கூலி  வேலை செய்யும் தொழிலாளர்கள்  நிறைந்த பகுதியாகும். இங்கு தீபா வளிக்கு முந்தைய தினம் விசைத் தறி கூடங்களுக்கு விடுமுறை விடப் பட்டு, தீபாவளி போனஸ் விசைத் தறி தொழிலாளர்களுக்கு விசைத் தறி நிர்வாகத்தின் சார்பில் வழங் கப்படுவது வழக்கம். பள்ளிபாளை யத்தில் செயல்படும் ஜவுளிக்கடை களில் விசைத்தறித் தொழிலாளர் கள் மற்றும் பொதுமக்களின் கூட் டம் தற்போதே அலைமோத தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி சண் முகம் கூறுகையில், பள்ளிபாளை யத்தை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் தான்  போனஸ் தொகை தருவார்கள். அதுவும் மதியம் அல்லது மாலை  நேரத்தில் வழங்குவதால், ஜவுளி களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகி றது. அதே நேரத்தில் விடிந்தால்  தீபாவளி என்ற நிலை இருப்பதால் என்ன பொருட்களை வாங்குவது? என்ன திட்டமிடுவது? எங்கு செல் வது என்று எதுவுமே முடிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அத னால் இந்த ஆண்டு முன்கூட் டியே தீபாவளிக்கான ஆயத்த பணி களை மேற்கொள்வது பொருத்த மாக இருக்கும் என்ற அடிப்படை யில், முன்கூட்டியே குடும்பத்தின ருக்கு ஜவுளிகளை எடுப்பதற்காக பள்ளிபாளையத்தில் செயல்படும் ஜவுளி கடைக்கு வருகை தந்துள் ளேன்.  இதற்கான பணத்தேவைக்காக வெளியிடங்களில் கடன் பெற்று தான் இந்த ஜவுளிகளை எடுக்கி றேன். என்றாலும் தீபாவளி தினத் திற்கு முந்தைய நாள் கடைசி நேர  அவசர நிலையில் ஜவுளி எடுப்பதை  தவிர்க்கும் போட்டு, இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார். இதேபோல, பட் டாசு வாங்க விரும்பும் பொதுமக்க ளும், தீபாவளி சமயத்தில் ஏற்படும்  விலை உயர்வை தவிர்க்கும் வகை யில் முன்கூட்டியே பட்டாசுகளை ஆன்லைன் மூலமாக நேரடியாக சிவகாசிக்கு ஆர்டர் செய்து, பெறு வது உள்ளூரில் உள்ள நண்பர் களை கொண்டு ஆன்லைனில் பட்டாசுகளை பெறுவது போன் றவற்றை செய்து வருகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.