districts

img

விளையாட்டு மைதான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு கோவை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டு

கோவை, அக்.28- ஒண்டிபுதூரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதான ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, இடம் மீட்கப்பட்டது. கோவை மாநகராட்சி யின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு  குடியிருப்போர் நலச் சங்க ஒருங் கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் வர வேற்று நன்றி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், ஒண்டிபுதூரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான விளை யாட்டு மைதான ஆக்கிரமிப்பை  மீட்க, அக்.23 புதனன்று நடந்த மாமன்ற  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன் எதிரொலியாக திங்க ளன்று காலையில் மாநகராட்சியால் பள்ளிக்கு சொந்தமான இடத்தின் ஆக் கிரமிப்பு இடித்து மீட்கப்பட்டது.  மாநகராட்சியின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து, குடியிருப்போர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளரும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பின ருமான வி.தெய்வேந்திரன் கூறுகை யில், கோவை மாநகராட்சி, கிழக்கு மண் டலம், ஒண்டிபுதுாரில், 1960 இல், 6.14 ஏக்கரில் எஸ்.எம்.எஸ்., லே- அவுட் உரு வானது. அதில், 65 சைட்டுகள் பிரிக்கப் பட்டு. இவற்றில் பொது ஒதுக்கீடு இட மாக, பள்ளி கட்டுவதற்கு, 43 சென்ட் மற்றும் விளையாட்டு மைதானத்துக்கு, 19 சென்ட் ஒதுக்கப்பட்டது. பின்னர், 1972 இல் அந்த வரை படம்  திருத்தப்பட்டு, பொது ஒதுக்கீடு இடத் தில், புதிதாக ஏழு சைட் பிரித்து, அப் போதைய சிங்காநல்லுார் நகராட்சியில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அன்றிலிருந்து நடைபெற்ற தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக தற் போது வெற்றி கிடைத்துள்ளது. இந்த  முயற்சிக்கு பலனாக தற்போது மாநக ராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்த தோடு, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, உயர் நீதிமன்றத்திலும் விரி வாக அறிக்கை தாக்கல் செய்து, ஒப்பு தல் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சி யாக மாநகராட்சிக்கு சொந்தமான சொத்தை மீட்க மாநகராட்சியால் அதற் கான பணியை உடனடியாக துவக்கி னர். பள்ளி மைதானத்தை மீட்க தீர்மா னம் நிறைவேற்றி ஆக்கிரமிப்பு அகற் றிய மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற  உறுப்பினர்கள், ஆணையர் சிவகுரு  பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.