districts

img

பணி ஓய்வுபெற்ற தலைவர்களுக்கு பாராட்டு விழா

தருமபுரி, ஜூன் 17- அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. அரசு துறைகளில் பணியாற்றி அரசு ஊழியர்கள் நலனுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும், பணியில் சேர்ந்தநாள் முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பணியாற்றியுள்ளனர். பல தியாகங்களை செய்து பணி ஓய்வு பெற்றுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டப் பொருளாளரும், ஜாக்டோ - ஜியோ நிதிகாப்பாளருமான கோ.புகழேந்தி, முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் பி.நாகராஜன், முன்னாள் மாவட்ட தணிக்கையாளர் கோ.முனிராஜ் ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நி கழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கோ.பழனி யம்மாள் சிறப்புறையாற்றி, பணி ஓய்வுபெற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர்களுக்கு நினைவுபரிசு வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.மகேஸ்வரி, முன்னாள் தலைவர் சி.காவேரி, அரசு ஊழியர் சங்க இணைச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, தணிக்கையாளர் எம்.முனிராஜ், துணைத்தலைவர் எஸ்.குணசேகரன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் பி.எம்.கெளரன், வேளாண்மை துறை அமைச்சு பணியா ளர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.ஜெயவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பணி ஓய்வுபெற்ற கே.புகழேந்தி, பி.நாகராஜன், கோ.முனிராஜ் ஆகியோர் ஏற்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் எம்.அன்பழகன் நன்றி கூறினார்.