சேலம், பிப்.25- சேலம் மாநகர காவல் ஆணையராக 16 வருடங்க ளுக்கு பிறகு தற்போது பெண் காவல் அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய நஜ்மல் ஹோதா, சென்னை தலைமையிட ஆவடி போக்கு வரத்து பிரிவு கூடுதல் ஆணையராக மாறுதல் செய்யப் பட்டார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணைய ராக பணியாற்றிய விஜயகுமாரி என்பவர், சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். சேலம் மாநகர காவல் துறையில் முதல் ஆணையரான ஜெகநாதன் தொடங்கி அடுத்தடுத்து ஆண்களே ஆணைய ராக நியமிக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் சேலம் மாநகர முதல் பெண் காவல் ஆணையராக சீமா அகர்வால் நியமிக்கப் பட்டார். அவருக்குபின் 13 ஆண்கள் தான் காவல் ஆணைய ராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையராக 2 ஆவது முறையாக, 16 ஆண்டுகளுக்கு பிறகு விஜயகுமாரி நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வர வேற்பை ஏற்படுத்தி உள்ளது.