districts

ரத்த உறைவு மருந்து அரசு மருத்துவமனையில் இல்லை: திருப்பூர் ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

திருப்பூர், பிப்.19- ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் பாக்டர் 9  உறைகாரணி மருந்து திருப்பூர் அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் இருப்பு  இல்லை. பாக்டர் 8 உறைகாணி மருந்து தீர்ந்து விட்டது. மற்ற காரணிகளோ குறைந்த அளவு களே இருப்பு உள்ளன. எனவே உடனடியாக  மருந்து வர ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நோயாளிகள் சிலர் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளிக்க வந்திருந்தனர். அப் போது அவர்கள் கூறியதாவது, திருப்பூர்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாக்டர் 7,8,9, ஆகிய உறைகாரணி 5 வகை மருந்துகளும் இருப்பு இல்லை. அதன் பின்  டிச.15 ஆம் தேதிக்கு பின் தான் மருந்துகள்  வந்தது. அப்போதும் பாக்டர் 9 உறைகாரணி  மருந்து வரவில்லை. கடந்த 6 மாதங்களாக பாக்டர் 9 உறைகாணி மருந்து இருப்பு இல்லை. பாக்டர் 8 உறைகாரணி மருந்து தீர்ந்துவிட்டது. மற்ற காரணிகளோ குறைந்த அளவுகளே இருப்பு உள்ளன. விரைவில்  தீரும் தறுவாயில் உள்ளன, எனவே உடனடி யாக மருந்து வர ஏற்பாடு செய்ய வேண் டும். ரத்த உறையாமை என்றால் அடிபட்டால் ரத்தம் வந்தால் குறையாது. ரத்தம் வந்து கொண்டே இருக்கும். கை கால்களில் மூட்டு களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வீக்கம் வந்து அதிக வலி ஏற்படும். தலையில் மற்றும் தொண்டையில் அடிவயிறு பகுதிகள் ரத்தக் கசிவு ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. ரத்தம் உறையாமை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால் ரத்தக் கசிவு ஏற்படும்போதெல்லாம் ஃபேக்டர் எனப்படும் உறைகாரணி மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டும். ரத்தக்கசிவு ஏற்ப டும் போது ஒரு முறை மருந்து செலுத்தினால்  8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மட் டுமே அந்த மருந்து வேலை செய்யும். அதற் குள் ரத்தக்கசிவு சரியாகவில்லை என்றால் மறுபடியும் ஊசி மூலம் மருந்து செலுத்த வேண்டும். இந்த உரை காரணி மருந்து அதிக  விலை என்பதால் அனைவராலும் வாங்க முடி வதில்லை. ப்ரோபிலாக்சிஸ் என்னும் முன் காப்போம்  திட்டத்தின் மூலம் ரத்தக் கசிவு ஏற்படும் முன்னே வாரம் இருமுறை உறைகாரணி மருந்து செலுத்தும் வசதி நான்கு வயது முதல்  18 வயது வரை உள்ளவர்களுக்கு தமிழ்நாட் டில் சில மருத்துவமனைகளில் உள்ளது. இந்த  வசதியை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும். மேலும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 நபர் கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் ப்ரோபிலாக்சிஸ் திட்டத் தின் மூலம் சிகிச்சை பெறுகிறார்கள். அவர் களின் சிகிச்சையை திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் தனியாக ஹீமோபிலியா டே  சென்டர் ஏற்படுத்தி உடனடி தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் புதிதாக அறிமுகமாகியுள்ள ஹெமிலிப்ரா என்னும் ஊசி மருந்து 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை போட்டால் போதும் ரத்த கசிவுகளை ஏற்படாமல் கட் டுப்படுத்தும். இது வருமுன் காப்போம் என்ற  வகையில் செயல்படுத்தப்படுவதால் மிகவும்  பயனுள்ளதாக உள்ளது. இந்த மருந்தை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். என கூறினர். இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேச னிடம் கேட்டபோது, மருத்துவமனையில் உறைகாரணி மருந்துகள் தட்டுப்பாடு உள் ளது என்பது உண்மைதான். இதுகுறித்து அர சிடம் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் போதிய மருந்து மருத்துவம னைக்கு கிடைத்துவிடும் என்று தெரிவித் தார்.