districts

img

மக்கள் விரோத ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மக்கள் விரோத ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, மூத்த தலைவர்கள் சேகர், வஞ்சி தீர்த்தகிரி, வட்டக் குழு உறுப்பினர்கள் மனோகரன், அம்புரோஸ், இளவரசி, பொண்ணு சாமி, தங்கம், மாதையன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.