districts

img

ஒன்றிய அரசு, ஆளுநரை கண்டித்து நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்

திருப்பூர், ஆக. 20 - நீட் தேர்வை ரத்து செய் யாத ஒன்றிய அரசையும், அதற்கு துணை போகும் மாநில ஆளுநரையும் கண் டித்து  திமுக சார்பு அமைப் பினர் திருப்பூரில் உண்ணா விரதம் மேற்கொண்டனர்.  தி.மு.க இளைஞர் அணி,  மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஞாயி றன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உண்ணாவிரதம் நடைபெற்றது. திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செய லாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான க.செல்வராஜ் தலைமையிலும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், 4-ஆம் மண்டலத் தலைவருமான இல. பத்மநாபன் மற்றும் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலையிலும் இப்போராட்டம் நடை பெற்றது.  உண்ணாவிரத அறப்போராட்டத்தை  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். நீட் எதிர்ப்பு நிலைபாட்டை கொண்ட பல்வேறு சார்பு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்து பேசினர். தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட் டெடுக்க நீட் தேர்வை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் இப்போராட்டத்தில் திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத் துவர் அணியைச் சேர்ந்தோர் கலந்து கொண் டனர்.