districts

img

வீட்டு வசதி கூட்டுறவு பதிவாளரின் ஊழியர் விரோத போக்கு

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் சேலம், ஏப்.10- ஊழியர் விரோத போக்கை கடை பிடித்து வரும் வீட்டு வசதி கூட்டுறவு துணைப் பதிவாளரை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  ஊழியர் விரோதபோக்குடன் தொடர்ந்து செயல்படும், செங்கல் பட்டு மாவட்ட வீட்டு வசதி கூட்டுறவு துணை பதிவாளர் உமா தேவியை  பணி நீக்கம் செய்ய வேண்டும். கூட்டு றவுத் துறையில் ஊழியர்களை அவ மரியாதையுடன் நடத்தும் செயலை கண்டித்தும், உடனடியாக தமிழக அரசு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் வீட்டு வசதி துணைப் பதி வாளர் அலுவலகம் முன்பு, நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட தமிழ் நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற் றனர்.  தருமபுரி இதேபோன்று,  தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் பி.சி.குமார் தலைமை ஏற்றார். மாவட்ட செயலா ளர் ந.பாக்கியவதி கோரிக்கை விளக் கவுரை ஆற்றினார். இதில், மாநில  துணைத்தலைவர் கோ.பழனியம் மாள் கண்டன உரையாற்றினார், இதில், தமிழ்நாடு அரசு ஊழியர்‌ சங் கத்தின் மாவட்ட நிர்வாகி கே.புக ழேந்தி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முடிவில், மாவட்ட இணைச் செயலாளர் ராமன் நன்றி கூறினார்.