அவிநாசி, ஆக.26- மனிதன் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து செல்லும்போதெல் லாம் அவன் வணங்கும் கடவுள்களை யும், ஊரையும் அழைத்துச் செல்கி றான். ராஜஸ்தான் மாநிலத்தில் அந்தியூர், அவிநாசி போன்ற ஊர் பெயர்கள் உள் ளது என பண்பாட்டு ஆய்வாளரும், முன்னாள் ஆட்சியருமான ஆர்.பால கிருஷ்ணன் குறிப்பிட்டார். அவிநாசியில் ஞாயிறன்று, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் அவிநாசி கிளை மற்றும் நவீன மனிதர்கள் இணைந்து நடத்திய சிந்து சமவெளி நூற்றாண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை கவிஞர் கோவை சதாசிவம் தலைமையேற்று நடத்தி னார். இதில், பூபதி, தமிழ் பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நவீன மனிதர் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பாரதி சுப்ப ராயன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்டச் செய லாளர் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். “அசதிக்கு சுடர் தந்தேன்” என்கிற தலைப்பில் தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா அறிமுக உரை யாற்றினார். இதையடுத்து சிந்துவெளி பண் பாட்டு ஆய்வாளரும், முன்னாள் ஆட்சி யருமான ஆர்.பாலகிருஷ்ணன் சிறப் புரையாற்றுகையில், ராஜஸ்தான் மாநி லத்தில் சிக்காரி என்ற மாவட்டத்தில் அங்கேயும் அவிநாசி, கரூர், அந்தியூர், என்ற ஊர்கள் இருக்கின்றன. சிந்து நதியின் தொடர்ச்சியாக இருக்கும் பகுதி. சிற்ப சாஸ்திரங்கள் அனைத் தும் சமஸ்கிருதத்தில்தான் எழுதப் பட்டுள்ளது. ஒரு வரலாற்றின் தொடர்ச்சி என் பது ஒரு மொழியின் தோற்றத்தன்மை. எனக்கு தமிழ் மாணவன் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே போதும். ஒரிசா வின் பண்பாட்டுத்துறை செயலாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள் ளேன். கடைசியாக பொறுப்பை ஒப்ப டைப்பதற்கு முன்பாக முதல் செம் மொழி ஒரிய மாநாட்டை நடத்தி விட்டு வந்தேன். என்னை இவ்வாறு செய்வ தற்கு வழி நடத்துவதே தமிழ் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை சொல்லிக் கொடுத்ததே தமிழ் தான். பூம்புகார் நகரத்தில் பல தேசங்களைச் சேர்ந்த, பழ மொழிகளைச் சேர்ந்த பல நூறு வருடங்களுக்கு முன்பு பல மொழிகளை பேசி வணிகம் செய்பவர்கள், மது குப்பிகன் போன் றவை வந்தன. இதனை கொடு மணல் கீழடியில் கிடைக்கின்றன. எல்லைகள் என்பவை நேற்று வந்தவை. வேர்களை வணங்க வேண்டும் என்பது. வேர்களுக்கு நன்றி என்று சொல்லக் காரணம் பழங்குடியின மக்களுடன் வேலை பார்த்த காரணம்தான். எந்த நாட்டில் நெல் விவசாயம், தொடங்கியது சவுத் ஆசிய, தாய்லாந்து இந்தோனேசியா பகுதியில், ஜெய்பூர், கோலாப்பூர் மழை தொடர், அந்தப் பகுதியில் பழங்குடி மக்களை பார்க்கி றேன். அவர்களுடைய மக்கள் தொகை வெறும் ஆயிரம் பேர்தான். அந்தப் பகு தியில்தான் நெல் உற்பத்தி தொடங்கி யது என்று கூறுகிறார்கள். எல்லா பழங் குடியினரும் ஆண் எப்படிப் பிறந்தான், பெண் எப்படி பிறந்தாள், உறுப்புகள் எப்படி இருந்தது இதெல்லாம் அவர்களி டம் கதை இருக்கும். எந்த ஒரு விலங் கும் எந்த ஒரு பயிறும் அது காடுகளில் இருந்துதான் தொடக்கம்.
கோயம்புத்தூர் பல்கலைக்கழகத் தில் 1948 இல் ராமையா என்ற நபர் ஒரிசா பகுதிகளில் சென்று நெல்லை பற்றி ஆராய்ச்சி செய்கிறார். இங்குதான் நெல் உற்பத்தியாகிறது என்று எழுதுகிறார். காட்டு நெல்லாக இருந்ததை வீட்டு நெல்லாக வளர்க்கத் தொடங்கியது, வேளாண் மனித தொடக்கத்தில் இன் னும் கதை மரபுகளில் வைத்திருப்பவன் பழங்குடி. அங்கு அரசாங்கம் பழங்குடி யினருக்கு 45 வீடுகள் கட்டிக் கொடுத் துள்ளனர். ஆனால் அந்த வீட்டில் பழங் குடியினர்கள் குடியேறவில்லை, இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இவர்கள் அங்கு சிறிது நாட்கள் மட்டுமே வசித்தார்கள் என்று கூறினார். நானே போய் பழங்குடியினர்களிடம் சென்று கேட்டேன். எங்களுக்கு பொருத்தமான இடம் அது கிடையாது என்று கூறுகி றார்கள். இவர்களாகவே முடிவு செய்து அந்த வீட்டை கட்டிக் கொடுத்தார்கள் என்று கூறினார்கள். உங்களுக்கு பொருத்தமான இடம் எது என்று கேட்ட போது, எந்த இடத்தில் தண்ணீர் இருக் கிறதோ அந்த இடத்தில் நமக்கு ஒத்து வருமா என்று பார்ப்போம், ஒரு இலை யில் சோளம் அல்லது கேழ்வரகு வைத்து, இதே போல மூன்று இது வைப்போம், இந்த மூன்றில் ஒன்று மனி தர்களுக்கு, இன்னொன்று ஆவிக ளுக்கு, மற்றொன்று ஆடு மாடுகளுக்கு. இந்த தானியங்களை வைத்து பழங் குடியின பூசாரி பின்னோக்கியே நடந்து வருவார்கள். அப்படியே சென்று விடு வார்கள். மறுநாள் வந்து பார்க்கும் போது இந்த தானியங்களுக்கு ஏதா வது இடையூறுகள் ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்பார். வைத்திருந்த இடத்தில் ஏதா வது எறும்பு பறவைகளோ எடுத்துச் சென்றுள்ளதா என்று பார்ப்பார். இதில் மூன்றில் எந்த இடம் அவர்களுக்கு பொருத்தமான இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் குடிப்பெயர் வார்கள். பழங்குடி இனத்தைச்சேர்ந்த மக் கள் தான் மொகஞ்சதாரோவில் உள்ள தொழில்நுட்பத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எரு மையை கொண்டாடிய இலக்கியம் சங்க இலக்கியம், ஒரு நாள் எனது வாகன ஓட்டியுடன் சென்ற பொழுது ஒரியா மொழியில் தமிழில் என்று எழுதப்பட்டது. இதை நான் கவனித்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கி றேன். இந்தப் பகுதிக்கு செல்வோம் என்று பார்த்த பொழுது, அவர்கள் திரா விட பழங்குடி இந்த ஊருக்கு எப்படி தமி ழில் என்று பெயர் வந்தது ஆராய்ச்சி செய்ய தொடங்கினேன்.
பழங்குடியினர்கள் யாரும் யாரை யும் ஏமாற்றி பிழைப்பதில்லை, பெரும் பாலும் காதல் திருமணம், காதல் திரு மணத்திற்கு தோழி உதவி செய்வாள். சத்தீஸ்கரும், ஒரிசாவும் சங்க இலக்கி யத்தின் நிகழ்கால சோதனைக் கூடங் கள். மனிதன் பயணம் செய்யும்போது, வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் அவன் வணங்கும் கட வுள்களை அழைத்துச் செல்கிறான், அதனால்தான் மலேசியா, சிங்கப்பூரில் முருகன் உள்ளார். தென்னாப்பிரிக்கா வில் மாரியம்மன், பிடாரி அம்மனும் சென்று இருக்கிறார்கள். மணிப்பூரில் தேர்தல் நடக்கும்போது எல்லைப் பகு திக்கு சென்றேன். அங்கு தமிழ்ச் சங்கம் இருக்கிறது, தேவாலயம் இருக்கிறது, மாரியம்மன் கோவில்கள் இருக்கிறது. ஏனென்றால் பர்மாவிலிருந்து வரும்போது தமிழன் அங்கு தங்கி விட்டான். மேலும் மனிதன் எங்கு செல்கிறான் அத்துடன் ஊர் பெயரையும் தாங்கிச் செல்கிறான். இதற்கு எனக்கு புரிதலை கொடுத்தது பழங்குடியினர் தொடர்பு. திராவிட பழங் குடி ஒரிசாவில் ஒரு மலை ஏமகிரி மலை. உலகம் முழுவதும் பழங்குடியினர் பெயர் வைப்பது ஒரு பொதுவான பெயர் வைப்பார்கள் அது, முன்பு இறந்தவர்க ளின் பெயரை வைப்பார்கள். இதில் நாம் புரிந்து கொள்வது பெயரை தாங்குப வன் தான் பேரன், பெயரை தாங்குபவள் தான் பேத்தி. இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டால் மனிதன் புலம் பெயர்ந்து கொண்டே இருப்பான். வன்னி மரத்தின் உடைய வேர் களை பிடித்து சென்றால் சங்க இலக் கியத்தின் வன்னி மன்றம் என்று வரும். வன்னி காடு என்றும் வரும். சிந்துவெளி பகுதியில் முக்கியமான மரம் வன்னி, சோழ மன்னர்களின் குல வரலாறு வன்னி. உண்மைக்கு சாட்சியாக இருந் தது வன்னி, வன்னி மரத்தின் பெயர் களை தேடிச் செல்லும் போது அது சிந்து வெளியில் விட்டது. புலம்பெயர்ந்து வந்தவர்களினுடைய கதையில் வன்னி மரம் இருந்திருக்கும். சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இட மும் சங்க இலக்கியம். திசைகள் என் பவை நேற்று வந்தவை தேடல்கள் என் பது மனிதனின் உடன் பிறந்தவை. சிந்துச் சமவெளி பண்பாட்டை கொண்டாடு வோம், என்றார். முன்னதாக உடுமலை தமுஎகச மக் கள் கலைக்குழு துரையரசன் பாடல் கள், பொன் மண் மத்தாளம் கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.