திருப்பூர், டிச.24- தமிழ்நாடு பொது நூலகத் துறையின் கீழ் இயங்கும் ஊர்ப்புற நூலகங்களில் வேலை செய்யும் நூலகர்கள் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய் துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பொது நூல கத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூல கர்கள் நல அமைப்பின் மாநிலத் தலைவர் க.ஆனந்தன் விடுத்துள்ள செய்தியறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொது நூலகத் துறையில் 1915 ஊர்ப்புற நூலகங்களில் 1520 ஊர்ப்புற நூலகர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மிக வும் குறைந்த ஊதியத்தில் எவ்வித பயன் களும் இல்லாமல் சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே தேர்தல் அறிக்கை வரிசை எண் 178 இன் படி ஊர்ப்புற நூலகர்களுக்கும் கால முறை ஊதியம் உடனே வழங்க வேண்டும். பொது நூலக பணி விதிகளில் திருத்தம் செய்து அனைவரையும் மூன்றாம் நிலை நூலகர்களாக்க வேண்டும். 10 வருடங்க ளாக தரம் உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும். நூலகத்துறையில் காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நூலகத் துறைக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய ஐந்து நாட்கள், மாநில அளவில் அனைத்து ஊர்ப்புற நூலகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்வது என்று முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.