districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அன்னூர் போக்குவரத்து நெரிசல் - சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ்

அன்னூர், பிப்.23- குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் காரணமாக அன்னூரில்,  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீர மைக்க காவலர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஒன்று நெரிசலில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் நுழைவு வாயிலாகவும், தமிழக - கர்நாடகா மாநில எல்லைப் பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது. அத்திக்கடவு -  அவினாசி திட்டம், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட  பல்வேறு பணிகள் முடிவடைந்தும் சாலைபபணிகள் சீர மைக்கப்படாத காரணத்தால் சாலைகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு  குண்டும், குழியுமாக இருந்து வரு கிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்  ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று மாலை வேலையில் ஏற் பட்ட போக்குவரத்து நெரிசலில் மேட்டுப்பாளையம் சாலை, கோவை சாலை,சத்தி சாலை,அவினாசி சாலைகளில் சுமார்  3 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், நகரை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்தை ஒழுங்கமைக்க காவ லர்கள் இல்லாததால், ஆம்புலன்ஸ் ஒன்றும் வாகன  நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட போராட் டத்துக்குப் பிறகு ஆம்புலன்ஸ் போக்குவரத்தை கடந்து  சென்றது. அன்னூரில் அவ்வப்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரைந்து  சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள  வாகன ஓட்டிகள், முக்கிய சந்திப்புகளில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சிறுதானியங்கள் பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

உதகை, பிப்.23- இயற்கை வாழ்வுக்காக சிறுதானியங்கள் பயன்பாடு மற்றும் யோகா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் உதகை அரசு  கலைக்கல்லூரியில் நடைபெற்றது. ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளை யாட்டு அமைச்சகத்தின் கீழ்  யுவகேந்திரா என்ற தன்னாட்சி  அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பினர் மாணவ-  மாணவிகளுக்கு மலையேற்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின் றனர்.  இதன்தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்ட யுவகேந்திரா அமைப்பின் மூலமாக மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் என்னும் கருப்பொருளை உள்ளடக்கிய ஒரு நாள் கருத்தரங்கம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அரசு கலைக் கல்லூரி நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஷோபனா வரவேற்றார். இதற்கு இயற்பியல் துறை தலைவர் முருகன்  தலைமை தாங்கினார். தாவரவியல் துறையைச் சார்ந்த  பேராசிரியர் ராஜேஷ் குமார் “ சர்வதேச சிறுதானிய ஆண்டு”  என்னும் தலைப்பிலும், வரலாற்றுத் துறைத் தலைவர்  கனகாம்பாள் “ஆரோக்கியமான வாழ்வியல்” என்னும் தலைப்பிலும், வணிகவியல் துறை விரிவுரையாளர் ராம மூர்த்தி “ஜி-20” என்னும் தலைப்பிலும் விரிவாக பேசினார் கள். இதற்கான ஏற்பாடுகளை உதகை அரசு கலைக்கல்லூரி நுண்கலை மன்றக் குழுவினர் செய்திருந்தனர்.  இதேபோல் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த சிறு தானிய  வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

ஏரியில் உற்சாக குளியளிட்ட யானைகள்

தருமபுரி, பிப்.23- பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் முகாமிட்ட காட்டு யானைகள், அங்குள்ள ஏரியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட  வனப்பகுதிகளிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தருமபுரி மாவட்டத்துக்குள் அடிக்கடி புகுந்து வரு கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரிகளில் தண்ணீர் அதிகமாக உள்ளது. இதனால், கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து நீர்நிலைகளில் முகா மிட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கடந்த 2 மாதங் களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதி கரித்து வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், கிராமங்களுக் குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை வனப் பகுதியிலிருந்து இடம்பெயந்த குட்டி யானை  உட்பட 5 யானைகள் பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் கிராமத்துக்குள் புகுந்தன. அவை கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள ஏரியில்  முகாமிட்டன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். இதனிடையே, ஏரியில் இறங்கிய யானைகள், தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன. தொடர்ந்து நல்லூர் கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோடைக் காலத்தில் மட்டுமே உணவு, தண்ணீர் தேடி  வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளி யேறி, கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். ஆனால், தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதாலும், வனப்பகுதியில் வறட்சி நிலவுவதாலும் யானைகள் மட்டு மின்றி, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன  விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து வரு கின்றன. குறிப்பாக தண்ணீர் தேவைக் ்காகவே வனவிலங்குகள் கிராமங்களுக்குள் முகாமிடுகின்றன.

ஆட்சி மொழிச் சட்ட வார விழா

திருப்பூர், பிப்.23 – தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாளினை நினைவு கூரும் வகையில்  திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மார்ச் 9 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி முடிய ஒரு வார காலத்திற்கு ஆட் சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஒரு  வார காலத்தில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி, கணி னித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்து பயிற்சி, தமிழில்  பெயர்ப்பலகை வைப்பது குறித்து விளக்கம், ஆட்சிமொழிச்  சட்டம் / வரலாறு, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல்  பயிற்சி, ஆட்சிமொழிப் பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட  விளக்கக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளார்.

ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளியில் புத்தகக் கண்காட்சி

திருப்பூர், பிப்.23- திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.  டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியில் புத்தகக் கண் காட்சி நடைபெற்றது.  இக்கண்காட்சியில் கதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல்,  பொதுஅறிவு, கலைக்களஞ்சியம், அகராதிகள், வாழ்க்கை  வரலாறு, கணிதம், கணினிஅறிவியல், போட்டி தேர்வுகளுக்கு  என பல்வேறு தலைப்புகளில் 20000 க்கும் அதிகமான புத்த கங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை பெற்றோருடன் வந்து வாங்கி சென்றனர். முன்னதாக ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி கண்காட்சியினை தொடங்கிவைத்து மாணவர்களிடையே புத்தகங்களுக்கு செய்யும் செலவினம், எதிர்கால வாழ்க்கைக்கான முதலீடு  என்னும் கருத்தை வலியுறுத்திபேசினார்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் பிரமோ தனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகி யோர் செய்திருந்தனர்.

மாணவிகளுக்கு கழிப்பிடம் ரோட்டரி சங்கத்தினர் அர்ப்பணிப்பு

அவிநாசி, பிப்.23- திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி மற்றும் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் 15 அரசு பள்ளிகளில்,  மாணவி கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடங்கள் செவ்வாயண்று  திறந்து வைக்கப்பட்டது.  திருமுருகன்பூண்டி அருகே பெரியாயிபாளையம் திரு வள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நி கழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர்கள்(மெட்டல்) கே.வேலு சாமி, முகமது ஜபீர் திருமுருகன்பூண்டி ஆகியோர் தலைமை  வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி சங்க நிர்வாகி கள் அருள்ஜோதி கார்த்திகேயன், சண்முகசுந்தரம், அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க  உதவி ஆளுநரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.ஆறு முகம் வரவேற்றார். இதையடுத்து பெரியாயிபாளையம், ராக் கியாபாளையம், கருமாபாளையம், பஞ்சலிங்கம்பாளை யம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட  15 பள்ளிகளில் மொத்தம் ரூ.49 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்ட மாணவிகள் கழிப்பிடங்கள் திறக்கப்பட்டது.

பல லட்சம் மதிப்பிலான சிகரெட்,  பீடிகளை திருடிய இருவர்  கைது

அவிநாசி, பிப்.23- அவிநாசியில் வேலை செய்யும் இடத்தில் பல லட்சம் மதிப் பிலான சிகரெட், பீடி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற  இருவரை போலீஸார் செவ்வாயன்று கைது செய்தனர். அவிநாசி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (47). இவர் சிகரெட், பீடி மற்றும் உணவு பொருள்கள் விற்பனை  செய்யும் முகவராக உள்ளார். இவரிடம் அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(33). நம் பியம்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார்(39) ஆகி யோர் பல மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடை யில் அடிக்கடி பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வந்துள் ளது. சந்தேகித்த கருப்பையா சிசிடிவி கேமராவை ஆய்வு  செய்த போது, கணக்கில் வராமல் பல லட்சம் மதிப்பிலான  சிகரெட், பீடி உள்ளிட்ட பொருள்களை இருவரும் திருடி வெளியே விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், சம் பத்குமார் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய் தனர்.

பிஏபி கால்வாயில் சிக்கிய மாணவர்: கல்லூரி மாணவர்கள் கோரிக்கை

திருப்பூர், பிப். 23 - திருப்பூர் ஆண்டிபாளையம் வாய்க்கா லில் விழுந்து காணாமல் போன நண்பரை கண்டுபிடித்து தரக் கோரி சக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சார்ந்தவர் சங்கீதா. இவரது மகன் சஞ்சய்  (19), திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந் தார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி  நண்பர்களுடன் திருப்பூர் தாராபுரம் சாலை  ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வாய்க் காலில் குளிப்பதற்காக சென்றார். வாய்க்கா லில் நண்பர்களுடன் குளித்த போது திடீரென  சஞ்சய் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக வும், மேலும் நண்பர்கள் சஞ்சையை காப் பாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் நீரின்  வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் சஞ்சையை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.  இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் நீரில் அடித்து செல்லப் பட்ட சஞ்சயை தேடினர். ஆனால் வாய்க்கா லில் அதிக அளவில் நீர் செல்வதால் தேடும்  பணியில் தொய்வு ஏற்பட்டது. வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி சஞ்சையின் உடலை தீவி ரமாக தேடி கண்டுபிடித்து தர வேண்டும் என  வலியுறுத்தி சிக்கண்ணா அரசு கலை கல் லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர்  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஒன்று திரண்டு வியாழக் கிழமை கோரிக்கையை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவ, மாணவி களுடன் காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி  மாணவரை விரைந்து மீட்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து நான்காவது நாளாக மாணவரை தேடும் பணி நடைபெற்று வரு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மின் தடை

அவிநாசி, பிப்.23- குன்னத்தூர் துணை மின்  நிலையத்தில் மாதாந்திர  பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால், வெள்ளிக்கி ழமை பிப்.24 காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது  என, மின்வாரியத்தினர் தெரி வித்துள்ளனர். மின் தடை ஏற்படும் பகுதிகள்:  குன்னத்தூர், ஆதியூர்,  குறிச்சி, வேலம்பாளையம்,  தாளப்பதி, கருமஞ்சிரை, தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பெருமாநல் லூர் சாலை, கருணாம்பதி, வெள்ளிரவெளி.

ஏடிஎம்-யில் கொள்ளை முயற்சி 

பெண் காவலர்கள் துரித நடவடிக்கையால் தப்பியது

சேலம், பிப்.23- ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க நடந்த முயற்சியை பெண்  காவலர்களை துரித நடவடிக்கையால் கொள்ளையார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் காடையாம்பட்டி - பொம்மிடி சாலை யில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த ஏடிஎம் மையத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் உள்ளே நுழைந்து இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடு பட்டிருந்த பெண் காவலர்களான தெய்வராணி, நா்மதா ஆகி யோர் இதைப் பார்த்து கொள்ளையர்களைப் பிடிக்க முயன் ன்றுள்ளனர். அப்போது கொள்ளையர்கள் தாங்கள் வைத் திருந்த கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளனர். ஆனாலும், அச்சமின்றி பெண் காவலர்கள் இருவரும் சத்த மிட்டுள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்தகுமார், பயிற்சி உதவி  ஆய்வாளா் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய கும்பலை தேடினர். அப்போது பதுங்கியிருந்த கும்பலைத் தேடிப் பிடிக்க  முயன்றுபோது பயிற்சி உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை தாக்கிவிட்டு நபர்கள் தப்பியோடினர்.  இந்நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி  சென்றவர்களில் 2 பேர், ஏற்காடு கொளக்கூர் பகுதியை சேர்ந்த  லட்சுமணன் (28), சேலம் குகை பகுதியை சேர்ந்த ஆனந்த (22)  ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2  பேரையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் தப்பிய ஓடிய மற்றொரு நபர் யார் என்பது குறித்தும்  போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஓமலூர் அருகே ஏ.டி.எம்.  இந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பைன் பாரஸ்ட்டில் கண்காணிப்பு கேமரா

உதகை, பிப்.23- பைன் பாரஸ்ட்’ சுற்றுலா தலத்தில் கண்காணிப்பு கேமரா  பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட வன  அதிகாரிக்கு, போலீசார் பரிந்துரைக்க முடிவு செய்துள் ளனர். நீலகிரி மாவட்டத்தில் பைன் பாரஸ்ட் சர்வதேசளவில் புகழ்  பெற்ற சுற்றுலா தலமாகும்.  இந்நிலையில், கேரளாவில் இருந்து காரில் வந்த தம்பதி, பைன் பாரஸ்டை சுற்றி பார்த்தனர். பின்னர் திரும்பி வந்து காரை பார்த்தபோது, கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 3 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இது குறித்து உதகை புதுமந்து காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.  உதகை போலீசார் கூறுகையில், திருட்டு சம்பவம் நடப்பது வன எல்லை என்பதால், இந்த செயலில் யார் ஈடு படுகிறார்கள் என்பதை கண்டறிவதில் சிரமம் உள்ளது. மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களும் இல்லை. எனவே மாவட்ட வன அதிகாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி,  அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என்றனர்.

நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

உதகை, பிப்.23- கோடை தொடங்க உள்ளதால், நீல கிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் தண்ணீர் தொட்டி  என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சமவெளியில் பாயும் நதி களின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும்  மாயார், பவானி ஆகிய இரு ஆறு களும் கோவை, ஈரோடு மாவட்டங் களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவை யை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன. இதேபோல் 60 சத விகிதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால் ஆண்டில் சுமார் 94 நாட் கள் மழை பெய்து வருகிறது. அதாவது  மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு  பருவமழைகள் மூலம் ஆண்டிற்கு சுமார்  1250 மில்லி மீட்டர் மழை பொழிவு பெய் கிறது. இதேபோல் மலை மாவட்டம் என்பதால் குந்தா, பைக்காரா புனல் நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின்  நிலையங்கள் மூலமாக 833.65 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்துக்கு 70  மெகாவாட் பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப் பப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாடு முழு வதும் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை  பொருத்தவரை அனைத்து அணை களும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந் துள்ளதால், மாவட்டத்தில் சேகரமாகும்  நீர் விரயமாகாமல் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதன் மூலம் குந்தா திட்டத்தின் கீழ் அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி குந்தா, கெத்தை, பரளி, பில் லூர் மூலம் 585 மெகாவாட்டும், பைகாரா  திட்டத்தின் கீழ் முக்குருத்தி, சிங்காரா,  மரவகண்டி, மாயார் மூலம் 248 மெகா வாட் மின் உற்பத்தி செய்யலாம். இதில்  குந்தா அணையில் 60 மெகாவாட் மின்  உற்பத்தி செய்யலாம். தற்போது வரை  510 முதல் 550 மெகாவாட் உற்பத்தி நடந்து வருகிறது. தற்போது சமவெளி  பகுதியில் கோடை வெயில் தாக்கம்  தொடங்கி இருப்பதால் மின் தேவையும்  வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மின் நிலையத்தில் உச்ச மின் தேவை யை அதிகரிக்க மின்வாரியம் நடவ டிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கோவை, திருப்பூர்,  ஈரோடு மாவட்டங்களுக்கு 400 முதல்  450 மெகாவாட் வரை மின் விநி யோகம் செய்யப்பட்ட நிலையில், வரு கிற நாட்களில், அதை தண்ணீரின் அளவைப் பொறுத்து 600 மெகா வாட்டாக உயர்த்த திட்டமிடப்பட் டுள்ளது, என்றனர்.