கோவை மாவட்டம், அன்னூர், மேட்டுபாளை யம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் மூலம் தொழிற் பூங்கா அமைக்க வேண்டி தமிழக அரசு ஆணை எண் 202 – 10.10.2022-ன் படி 1536.75 ஹெக்டர் (3864.04 ஏக்கர்) நிலம் எடுப்பு சட்டம் 1997-ன் படி கையகபடுத்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதற்கான இழப்பீட்டு தொகையும், தேவையான அதிகாரி கள் நியமனம் செய்யவும் அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி விவசாயிகளும். பொது மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள் ளனர். தங்கள் நிலத்தை, குடியிருப் புகளை இழந்து வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிவிடுமோ என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள் ளது. தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என ஆயிரக் கணக்கான விவசாயிகள் தன்னெ ழுச்சியாக போராடி வருகிறார்கள். இப்போராட்டத்திற்கு சில அமைப்பு களின் தலைவர்களும் , சில அரசி யல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள் ளனர்.
கடந்த 29-11-2022 அன்று அன்னூ ரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட் டதில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து பேசினார் கள். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், தற்போது நிலம் எடுத்தாலும் அடுத்து வரும் நம் ஆட்சியில் ரத்து செய்வோம் என அளந்துள்ளார். நிலம் எடுத்து தொழிற் பூங்கா அமைக்கப்பட்ட பிறகு அர சாணையை ரத்து செய்வது நடை பெறும் காரியமா? “கேட்பவன் கேனை யனாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது” என்பதாய் இருக்கிறது எஸ்.பி.வேலுமணியின் பேச்சு. மேலும், சேலம் எட்டு வழி சாலைக்கு விளைநிலங்களை எடுத்த புண்ணிய வாளர்கள் தானே இவர்கள். இத்திட்டத் திற்கு இவர்கள் ஆட்சியில் வகுக்கப் பட்ட திட்டம் தான் தற்போது அமல் படுத்திறார்கள் என்கிற கேள்விக்கு அதிமுகவினரிடத்தில் பதில் இல்லை. உண்மையில், கார்ப்ரேட்டுகளின் நல னிற்காக இந்திய விவசாயிகளின் நிலங் கள் அபகரிக்கப்படுகிறது என்கிற நிதர்சனமான உண்மை குறித்தோ, ஒன்றிய, மாநில அரசுகளின் கார்ப்ப ரேட் நலன் சார்ந்த கொள்கைகள் பற் றியோ, விவசாய விரோத சட்டங்கள் அதன் செயல்பாடுகள் பற்றியோ, இவர் கள் பேசவில்லை, பேசவும் தயா ரில்லை. இதற்கு எதிராக போராடு வதற்கும் தயாராக இல்லை.
இத்தகைய சரத்துகள் உள்ளடங் கிய விவசாயிகள் விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தான் ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயி கள் தலைநகர் டில்லியில் கடும் குளிரி லும், அனல் தகிக்கும் வெயிலிலும் போராட்டம் நடத்தினார்கள். விவசாயி களின் ஒன்றிணைந்த போராட்டம் வெற்றியும் பெற்றது. இந்த விவசா யிகளின் மாபெரும் போராட்டத்தை தன் அரசியல் லாபத்திற்காக சில கட்சிகள், சில அமைப்புகள் பயன்படுத் தும் சூழல் உள்ளது. என்பதை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சுட்டி காட்ட விரும்புகிறது. நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறப்படும் பகுதியில், ஏற்கெனவே பல பெரிய நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலங்களை, விவசாயிகளின் வறு மையை பயன்படுத்தி மிக குறைந்த விலைக்கு வாங்கி 5 முதல் 10 வருடங் கள் தரிசாக வைத்துள்ளதும், அரசு பதி வில் தரிசு நிலம் என பதிவு செய்துவிட்டு தொழிற்சாலை துவங்க அனுமதி அர சிடம் பெறுகிறார்கள் என்கிற உண்மை யும் உண்டு.
மேலும், இத்திட்டத்தின் வரைபடம் பவானி ஆறு வரை உள்ளதாக கூறப் படுகிறது. தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் பவானி ஆற்றி லிருந்து எடுக்க வசதியாகவும் குறைந்த விலைக்கு விளை நிலங்களை விவசா யிகளிடம் கையக படுத்தி பெரும் நிறு வனங்களுக்கு தாரை வார்த்து விவ சாயிகள் வாழ்வாதாரத்தை சீர்குலைக் கத்தான் இத்திட்டம் பயன்படும். ஆட்சியாளர்கள் தங்களது அதிகா ரத்தை பயன்படுத்தி சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை மிரட்டி விளைநிலங் களை கைப்பற்றி தனியாரிடம் ஒப்ப டைக்கும் செயல் சிறிதும் நியாயமற்ற விவசாய விரோத நடவடிக்கையாகும். இன்று அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள். மற்றும் பொது மக்களிடம், கையகப்படுத்தும் நிலங் களை பெரிய கார்பரேட் முதலாளி களுக்கு தாரை வார்த்து தொழிற் சாலை அமைப்பதால் பவானி ஆற்று தொழிற்சாலை கழிவுகளால் மாசு படும், சுற்றுச் சூழல் பாதிப்படைவ தோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடம் எழுவது இயல்பானது. தமிழக அரசு இத்திட் டத்தை கைவிட்டு மக்களின் நியாய மான அச்சத்தை போக்கி மக்கள் நிம்மதி யாக வாழ வகை செய்ய வேண்டும். அதேபோல் சூலூர் வட்டம், சுல் தான் பேட்டை ஒன்றியம், வாரப்பட்டி கிராமம் பகுதியில் சுமார் 430 ஏக்கர் நிலம் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க நிலம் கையக படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான சிறு, குறு, விவசாயிகளின் நிலம் பறிபோய் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கும் நிலை உள்ளது.
இழப்பீடுகள் விவசாயி வாழ்க் கையை உத்திரவாத படுத்தாது என் பதை. 1980 ம் ஆண்டு பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 40 ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்காமல் இன்று வரை போராடி வருகிறார்களே. அதுவே நமக்கு பாடம். தொழிற்சாலை துவங்க நிலம் தேவை படுமாயின் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக அரசு நிலங்கள் பல் லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக விவசாயம் வழியில்லாமல் உள்ளது. இதுபோன்ற வறட்சி மாவட் டங்களிலிருந்து சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு வாழ வழியில்லாமல் வருகிறார்களே, அங்கு தொழில் பூங்கா தொடங்கினால் தமிழகம் முன்னேறும். அதை விடுத்து நீர் வளம், மண்வளம் நிறைந்த விவசா யம் தளைத்தோங்கி உள்ள கோவை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளி டம் நிலத்தை கையகபடுத்தும் கொள் கைளை அரசு கைவிட வேண்டும். தமிழக முதலமைச்சர் தேர்தல் காலத்திலும், சட்டமன்றத்திலும் விவ சாய விளை நிலங்களை வேறு பயன் பாட்டிற்கு எடுக்கப்பட மாட்டாது என்ற உறுதியை கொடுத்துள்ளார். தற் போது போடப்பட்டுள்ள அரசாணை என்பது முதலமைச்சரின் உறுதி மொழிக்கு நேர் எதிரானது. ஆகவே தமி ழக அரசு அறிவித்துள்ள அன்னூர். மேட்டுப்பாளையம் சூலூர் தாலுகா வில் நிலம் கையகப்படுத்த போடப் பட்ட அரசாணையை விலக்கி கொண்டு விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.