districts

img

அண்ணாமலையின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்

கோவை, மார்ச் 26- மறைந்த என் தந்தை குறித்து இழிவாக பேசிய அண்ணாமலை  தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண் டும் என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்  கூறியுள் ளார்.  அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவரின் அப்பா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, அந்த கோட்டாவில் படித்தவர் நான் அப்படி கோட்டா வில் படிக்கவில்லை (தான் ஏற்க னவே ஒரு பேட்டியில் கோட்டா வில் படித்தவர் என அண்ணாமலை  கூறியுள்ளார்) என அண்ணாமலை பேட்டி ஒன்றில் தெரிவிந்திருந்தார்.

இதற்கு கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராம சந்திரன் கடும் எதிர்ப்பை தெரிவித் துள்ளார். கரூரை சேர்ந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை மறைந்த என் தந்தை பற்றி பேசியுள் ளார். அது மிகவும் வருத்தம் அளிக் கிறது. எனக்கு 15 வயது இருக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார்.

அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால்  எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை. அண்ணாமலை, இவ் வாறு கீழ்தரமாக பேசியதற்கு, என் னிடம் மன்னிப்பு கேட்ட வேண்டும்.  என் அப்பா இறந்தபோது, என்னி டம் காசு கூட இல்லை. கடன் வாங்கி  தான் அவருக்கு காரியம் செய் தோம். அப்பா மறைவிற்கு பிறகு என் அம்மா தான் என்னை கஷ்ட பட்டு வளர்த்தார். இறந்த ஒருவரை  பற்றி அண்ணாமலை பொய்யான தகவல் பரப்பி வருகிறார் என குற் றம் சாட்டினார்.

மேலும், அதிமுக விற்கும், திமுகவிற்கு தான் போட்டி.  அண்ணாமலைக்கு இங்கு இடமே இல்லை. கோவையில் பாஜக கூடு தலாக வாக்கு வாங்கினால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்தார். அண்ணாமலை நாள்தோறும் நான்கைந்து பேட்டிகள் கொடுக் கிறார். ஒவ்வொரு பேட்டியிலும், வாய்க்கு வந்த படி உளருவதும்,  பொய்பொய்யாய் பேசுவதும் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

ஏதோ ஒரு வகையில் தனக்கு ஊடக விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. இவரது அரை வேக்காட்டுத்தனமான பேச்சு அரசியலில் எந்த தாக்கத் தையும் ஏற்படுத்தாது. கோட்டா வில் படித்தவர்கள் இழிவான வர்கள் என்பது அண்ணாமலை யின் பார்வையாக இருக்கிறது. காலம்காலமாக வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு கை தூக்கி விடும்  முயற்சியே கோட்டா என்பதை ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு உரைக்கவில்லை என்றும், இறந்த வர்கள் பற்றி பேசும் போது நாவடக் கமாக பேசுவதே நாகரீகம் என  அரசியல் நோக்கர்கள் விமர்சித் துள்ளனர்.