districts

img

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் காலனியில் குடி நீருக்கான பொதுக்குழாயை இப்பகுதியில் அமைத்து தராமல் சூயஸ்நிறுவனம் பணி

நாமக்கல், ஏப்.6- நாமக்கல்லில் விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றி, அவர்க ளின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் வருவாய்துறையினரை கண் டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் வட்டம், எலந்தகுட்டை  கிராமம், சின்னார்பாளையத்தில் ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை 90 வருடங்களுக்கு மேல் அனுபவித்தும், விவசாயம் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில், செவ்வாயன்று காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் அங்கிருந்த விவசாயிகளையும், பெண்களையும் அத்துமீறி நிலத்தில் இருந்து வெளியேற்றி அனை வரையும் கைது செய்துள்ளது. மேலும், விவசாயிகள் குடியிருந்த வீட்டையும்  இடித்து தரைமட்டமாக்கி அப்பட்ட மான மனித உரிமை மீறலை நடத்தியுள் ளது. இதை கண்டித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பாக வெப்படை  நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய தலைவர் ஏ.குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர்  பி.பெருமாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத் தில் ஒன்றிய செயலாளர் எம். தனேந்தி ரன், வி.சண்முகம் எம்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.