districts

img

ஊழியர் விரோத நடவடிக்கை கால்நடை பராமரிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.18- ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநரின் நடவ டிக்கையை கண்டித்து, தமிழ்நாடு கால்நடை பரா மரிப்பு உதவியாளர் முன் னேற்ற சங்கத்தினர் கோபி செட்டிபாளையத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கால் நடை பராமரிப்பு உதவியாளர் மீது தொடர்ந்து  காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது, நேரில்  சந்தித்து பேசும் போது ஒருமையில் பேசுவது, கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை துப்புரவு பணி செய்யச் சொல்வது உள் ளிட்ட உதவி இயக்குநரின் பல்வேறு தொழி லாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு, கோபி கோட்ட செய லாளர் மா.மூர்த்தி தலைமை ஏற்றார். அரசு  ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜய மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.