திருப்பூர், செப்.2- குறுமைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காததை கண்டித்து சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறுமைய ஊழி யர்கள், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான மாவட்டங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் இன்று வரை பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. சிஐடியு தமிழ்நாடு அங் கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத் தின் சார்பில் பலமுறை மாவட்ட திட்ட அலுவலரிடம் கடிதம் அளித் தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத் தியும், இதுவரையும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு திங்களன்று அங்கன்வாடி ஊழி யர்கள் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு தமிழ்நாடு அங்கன் வாடி மற்றும் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் டி.சித்ரா தலைமையில் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற் றது. இதில், அவர் கூறியதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டில் 148 குறு அங்கன்வாடி பணியாளர்க ளுக்கு பதவி உயர்வு பட்டியல் தயா ரிக்கப்பட்டது. அதில் 124 பணியா ளர்கள் மட்டுமே கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி உயர்வு வழங் கப்பட்டது. மீதி 24 பணியாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள னர். உதவியாளர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு வழங்குவது என பட்டி யல் தயாரிக்கப்பட்டது. 2023 ல் 39 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. உதவியாளர்கள் 26 பேர் காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட திட்ட அலுவலர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள் ளது. இருப்பினும் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக தெரி வித்தார். இதில், சங்கத்தின் மாநில நிர்வாகி அனிதா, மாவட்டச் செய லாளர் கே.சித்ரா பொருளாளர் கே.பேபி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் கள் கலந்து கொண்டனர்.