districts

img

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.4- தகாத வார்த்தைகளால் பேசும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டத்திற்கு, அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எல். சித்ரா தலைமை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்டச் செயலா ளர் கே.எல்லம்மாள் உரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.உன்னி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், சிஐடியு மாவட்ட  நிர்வாகி கள் பி.பாலன், ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் எம்.பாக்கியம் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட இணைச் செய லாளர் வடிவுக்கரசி நன்றி கூறினார்.