கோவை, ஜூன் 22- மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றம் செய் யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வனப்பகுதி வழி யாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதி யில் ஆறு சென்றது. இதனையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1925 ஆம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட் டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம், கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட் டுப்பாட்டில் வந்தது. இதனையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகு தியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது. அதன்பின் அப் பகுதியில் இருந்த தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது. 100 ஆண்டுகளை நெருங் கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது. மேலும் இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள் ளது. இதனையடுத்து ஓடந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் தங்க வேலு, தூரிப்பாலத்தை தனியார் நிறுவன பங்களிப்புடன் புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், பணிகள் முழுமை யாக முடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப் பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப் பட்டு அதனை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை ஆட்சி யர் கிராந்திகுமார்பாடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஓடந் துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி யில் மேட்டுப்பாளையம் வட்டாட்சி யர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவ லர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் திர ளாக கலந்து கொண்டனர். நூற்றாண் டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.