திருப்பூர், டிச.29- 17 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அணைப்பாளையம் பகுதியில், மங்கலம் சாலை – கல்லூரிச்சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலமும், ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலமும் கட்ட கடந்த 2006 ஆம் ஆண்டு ரூ.6.50 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட் டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாக கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017 கட்டுமான பணிக ளுக்கான திட்டத்தின் மதிப்பீடு 19.29 கோடி உயர்த்தப்பட்டு மீண்டும் பணிகள் மேற்கொள் ளப்பட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், ரயில் வழித்தடத்தின் குறுக்கிலும் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்த மூன்றையும் இணைக்கும் வேலைகள் மட்டும் தொடர்ந்து இழுபறியா கவே இருக்கின்றன. பாலத்தின் கீழே உள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், நொய்யல் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தின் இருபுறமும் வெறும் மண் மட்டுமே கொட்டப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு மனு அளித்து வந்தனர். எனினும், அணைப்பாளை யம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங் கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நிர்வாகத்தின் இந்த அலட் சியப் போக்கை கண்டித்தும், 17 ஆண்டுக ளாக கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் அணைப்பாளையம் ரயில்வே மேம்பா லத்தை கட்டி முடிக்க கோரியும், பாலம் கட்டி முடியும் வரை, அணைப்பாளையம் பகுதி யில் பாலத்தின் இருபுறமும், தரமான அணுகு சாலை அமைத்துக் தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கநாதபுரம் கிளைச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) உதவிப் பொறியாளர் சுரேஷ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட் டது. வரும் செவ்வாய்க்கிழமை ஒப்பந்த தாரர் விபரம் தெரியவரும். வந்தவுடன் பணிகள் தொடங்குவார்கள். மாநகராட்சி அதிகாரிகளி டம் பேசி, சாலை அமைக்க முயற்சி எடுப்ப தாக தெரிவித்தார். கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை மக்க ளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்து வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தெரிவித்தனர். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜன், கிளைச் செயலாளர்கள் ப. செல்வி, வி. நவநீதன் மற் றும் நகரக் குழு உறுப்பினர்கள் வி.லட்சுமி, ர. கவிதா, பி.சின்னச்சாமி, அ.ஆறுமுகம், அ. உமாநாத் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.