ஆனைமலை விஆர்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டடத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செவ்வாயன்று திறந்து வைத்தார். இதில், பொள்ளாச்சி எம்பி., கே.ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கோத்தீரின் சரண்யா. ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.