districts

img

ஆனைமலை: மாசாணியம்மன் கோவில் திருவிழா - கொடியேற்றம்

பொள்ளாச்சி, பிப்.2- பொள்ளாச்சி அருகே உள்ள ஆனை மலை  மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி யது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனை மலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மற்றும் மாசி மாதத்தில்  வெகுவிமர்சையாக நடை பெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திரு விழா, தை அமாவாசையான செவ்வாயன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந் நிகழ்வையொட்டி 70 அடி உயரம் கொண்ட  மூங்கில் கொடிமரம் எடுத்து வரப்பட்டது. இதன்பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், மாசாணியம்மன் கோயில் முகப்பு பகுதியில் கொடிமரம் ஏற்றப்பட் டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில்  குண்டம்  திருவிழாவின் முக்கிய நிகழ்வான  மயான பூஜை வரும் பிப்ரவரி 14.ம் தேதி யும், இரவு முழுவதும் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பிப்.17 ஆம் தேதி காலை 9 மணி முதல் பக்தர்கள் தீ மிதித்து குண்டம் இறங்குதல் நிகழ்வு, பிப். 19ம்  தேதி மகா அபிஷேக அலங்கார பூஜை  நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தி னர் தெரிவித்துள்ளனர்.