ஈரோடு, பிப்.15- இந்த இடைத்தேர்தல் தமிழ்நாட்டை தன்மானத்தை நிரூபிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு என ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சா ரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உரை யாற்றினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங் கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோ வனை ஆதரித்து, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப் பினருமான சு.வெங்கடேசன் பல்வேறு பகுதி களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் உரையாற்று கையில், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற் கும், இந்தியாவின் இன்றைய அரசியல் சூழ லில் தமிழ்நாடு என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு கிடைத்துள் ளது. கை சின்னத்திற்கு அளிக்கிற வாக்கு ஒரு கட்சிக்கு அளிக்கும் வாக்கல்ல. தமிழ்நாட்டின் தன்மானத்திற்கு அளிக்கும் வாக்கு ஆகும். தமிழ்நாட்டின் பெயர மாத்துவேன் என்று ஆளுநர் ரவி சொல்கிறார். எடப்பாடி வாயைத் திறக்கவில்லை. தமிழ்நாட்டின் பெயரை எப் படி வேண்டுமானாலும் வைத்துக்கொள், ஆனால் நீ வைக்கிற விருந்தை நான் மூக்கு பிடிக்க சாப்பிடுவேன் என்று சாப்பிட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. எனவே, அவர்க ளுக்கு அளிக்கிற வாக்கு தமிழ்நாட்டிற்கு எதி ரானவர்களுக்கு அளிக்கிற வாக்கு. குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் திட்டத்தை 100 ஆண் டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கே அறிமுகப் படுத்தியவர் தந்தை பெரியாரின் ஈரோட்டு மண். உத்தரபிரதேசத்தில் இப்போதுதான் குழாய் பதித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல நிர்வாகம் எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது ஈரோடு மாநக ரம். ஆனால் இப்போதுதான் ஊருக்கு பைப் பும், லைட்டும் போட்டுக் கொண்டுள்ள மோடி யும், பாஜகவும் நிர்வாகத்தை நமக்கு சொல் லிக் கொடுக்கிறார்கள். மோடி சொல்வதற்கெல்லாம் அதிமுக வாயை பொத்திக்கொண்டு தலையாட்டு கிறது. தன்மானத்தின் அரசியலை, சுயமரியா தையை கற்றுக் கொடுக்கிற அரசாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இருக்கி றது.
ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்களை வெற்றி பெற வைப்பதன் மூலம், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இந்தியா விற்கு ஒரு செய்தியை நீங்கள் சொல்ல போகி றீர்கள். அந்த செய்தி பாஜகவின் பாசிச அடி மைத்தனத்திற்கு தலை குனியாத மாநிலம் தமிழ்நாடு என்கிற செய்தியாகும். பிபிசி ஒரு டாகுமென்ட்ரி வெளியிட்டால் அதன்மீது வரு மான வரித்துறையை ஏவிவிடுகிறார் மோடி. ஆனால் அதானிக்கும், அம்பானிக்கும் என்ன வெல்லாம் வேண்டுமோ, அதற்காக சட்டத் தைக் கூட வளைக்கிறார். பாஜக, மோடி என்ன அடித்தாலும் குனிந்து குனிந்து வாங்குகிற அதிமுக அல்ல தமிழ்நாடு. தன்மானமிக்க அர சியல் வரலாறு எங்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் தமிழ்நாடு. உடன்கட்டை ஏறுவதை புனிதமானது என்று பாஜக எம்பி நாடாளுமன்றத்தில் பேசு கிறார். தப்பு செய்தவன் அரசனேயானாலும், மன்னனேயானாலும் ஊரையே கொளுத்து வேன் என்ற கண்ணகி வாழ்ந்த நிலம் தமிழ் நாடு. பெண்களின் உரிமை, சமத்துவம், தன் மானத்திற்கு இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலமாக தமிழ்நாடு இருந்தது, இருக்கி றது. அந்த பாரம்பரியம் தொடர வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.எம்.எஸ்.செல்வகணபதி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரம ணியன், நகர செயலாளர் பி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.