நாமக்கல், ஜூன் 20- தூசூர் ஏரியில் ரசாயன கழிவுகள் கலப்ப தால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றஞ் சாட்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற நிலையில், இதன் எதிரொலி யாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேட்டம் பாடி தூசூர் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய உத்த ரவை பிறப்பித்தார். நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி ஏரி, வீசாணம் நீர் வரத்து கால்வாய், வேட்டாம் பாடி ஏரியின் நீர்பிடிப்பு மற்றும் நீர்வரத்து கால் வாய், சிதம்பரம்பட்டியில் நீர் வெளியேறும் பகுதி, சிவியாம்பாளையம் ஊராட்சி இலக்க நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கால்வாய், ரெட்டிப்பட்டி ஊராட்சி சாலப்பாளையம் கால் வாய் மற்றும் தூசூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச.உமா செவ் வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது, நீர் நிலைகளின் நீர் ஆதாரங்கள், நீர் வரத்து மற்றும் வெளியே றும் நீர், தூசூர் ஏரியின் மூலம் பயன்பெறும் பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விவரங் களை அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்ட றிந்தார். முன்னதாக நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் மேற்கண்ட நீர்நிலைகளின் தற்போதைய நிலவரம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோ சனை மேற்கொண்டார். நாமக்கல் தூசூர் ஏரியில் கழிவு நீர் கலப் பதை தடுக்க வேண்டுமென, கடந்த ஞாயி றன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாபெரும் மனித சங்கிலி இயக்கப் போராட் டத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.