கஞ்சா விற்பனை: 10 பேர் கைது
கோவை, மே 8- கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய் யப்படுகிறது. இதனை தடுக்க காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்தொ டர்ச்சியாக, கோவை மாநகர பகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், குனியமுத்தூர், பீளமேடு பகுதிகளில் போலீ சார் ஞாயிறன்று ரோந்து சென்றனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கோவை, கணபதி மாநகரை சேர்ந்த சயீத் அஜீஸ் (21), தேனி, காம ராஜர்புரத்தை சேர்ந்த மாதேஷ்வரன் (20), போத்தனூர் சாரதா மில் சாலையைச் சேர்ந்த மன்சூர் (41) மற்றும் தொழிலாளிகள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரேம் சந்த் (22), உடையாம்பாளையம் அசோக் தெருவை சேர்ந்த பிரதீப் (24), அரவிந்த் (20), சவுரிபாளையத்தை சேர்ந்த முருகன் (25), வினோத்குமார் (23), நந்தகுமார் (22) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பயிற்சி
கோவை, மே 8- ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பேரிடம் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத் திகை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பள்ளி அதிகாரி அஜய் பரதன் உத்தரவின் பேரில் கமாண்டர் ராஜேஷ் குமார், துணை கமாண்டர் ஹரிகுமார் ஆகியோர் தலை மையில் 2 ஆய்வாளர்கள், 8 பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து 60 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை அளித்தனர். மழை வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாப் பாக மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி யில் முதலுதவி சிகிச்சை, டிரம், கேன் மற்றும் மரத்துண்டு களை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மைய பகுதிக்கு சென்று, அங்கு நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது போன்று தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
கோவை, மே 8- வீட்டையும், நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீகுளிக்க முயன்றார். போலீசார் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு 1.5 சென்ட் நிலத்துடன் கூடிய வீடு உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபர் தனது வீட்டையும் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனம் உடைந்த முத்துராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையிட வந்துள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர், இது சம்பந்தமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, திருப்பி அனுப்பினர்.
மின்தடை
தருமபுரி, மே 8- அரூர் ஒன்றியம், மாம் பட்டி துணை மின்நிலையத் தில் செவ்வாயன்று (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. இத னால் மாம்பட்டி, சந்திரா புரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதுர், கே.வேட்ரப்பட்டி, தாம லேரிப்பட்டி, கணபதிபட்டி, மேல்செங்கப்பாடி, அம்மா பேட்டை, மாம்பாடி, நரிப் பள்ளி, சிக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
யானை தாக்கி விவசாயி படுகாயம்
தருமபுரி, மே 8- பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப் பாடி பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (72). விவசாயி யான இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் இர வில் தங்குவது வழக்கம். இந்நிலையில், சனியன்று இரவு குடிசைக்கு சென்று படுத்துள்ளார். ஞாயிறன்று அதிகாலை அவருடைய விளைநிலத்தில் ஒற்றை காட்டு யானை நுழைந் தது. அதனை கண்டு பதறி ஓடிய பெரியண்ணனை விரட்டி சென்ற யானை அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதில் அவர் 7 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பினார். மேலும் தோல்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம டைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து முதியவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத்துறை எச்சரிக்கை
உதகை, மே 8- கல்லட்டி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிக மாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண் டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தலைகுந்தா விலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ளதால் காட்டுயானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் முது மலை புலிகள் காப்பகம் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையை விரும்பி பயன்படுத்துகின்றனர். கல்லட்டி மலைப் பாதை 36 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் செங்குத்தான சாலைகளை கொண்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். எனவே வாகனங் களை 2 ஆவது கியரில் மட்டும் தான் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வாகனங்கள் இயக் கப்படுவதால் கல்லட்டி மலைப் பாதையில் அடிக்கடி விபத்து கள் நடந்து வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வெளிமாநில, பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இந்த மலைப் பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற் றும் அவசர வாகனங்களுக்கு மட்டும் மசினகுடி வழியாக உதகை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் இரவு நேரத்தில் அனுமதி கிடையாது. இந்நிலையில், கோடை சீசன் தொடங்கியிருப்பதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநி லங்களிலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரம் வாகனங்கள் வந்து சென்றுள்ளன. தற்போது கோடை மழை பரவலாக பெய்து பசுமை திரும்பி இருப்பதால், சாலையோரங்களில் மான்கள், யானைகள் உள் ளிட்ட வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. 29 ஆவது கொண்டை ஊசி வளைவில் யானை சுற்றி திரிந்தது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், வன விலங்குகளுக்கு அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் தேவையில்லாமல் சத்தம் எழுப்ப கூடாது இதை மீறி நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பணம் பறிப்பு
கோவை, மே 8- கேரள மாநிலம், தேவி குளத்தை சேர்ந்த ராகேஷ் ஆதித்யா (20) என்பவர், கோவை, புலியகுளத்தில் அறை எடுத்து தங்கி தனி யார் கல்லூரியில் படித்து வரு கிறார். சம்பவத்தன்று இவர், சவுரிபாளையம் மீனா எஸ் டேட்டில் உள்ள தனது நண் பரை பார்த்துவிட்டு, அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சவுரியபாளை யம் அருகே வாலிபர் ஒரு வர் அவரை வழிமறித்து அரி வாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். அதிர்ச்சியடைந்த ராகேஷ் ஆதித்யா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிலரின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து ராமநாதபுரம் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். விசா ரணையில், அரிவாளை காட்டி பணம் பறித்தது ராம நாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் (28), என்பதும், இவர் மீது ஏற்க னவே அடிதடி, வழிப்பறி உள் ளிட்ட 8 வழக்குகள் உள்ள தும் தெரியவந்தது. இதனை யடுத்து போலீசார் அருண் குமாரை கைது செய்தனர்.
தொப்பூர் கணவாயில் விபத்துகளை குறைக்க சாலையோரங்களில் பெரிய அளவில் பள்ளங்கள்
தருமபுரி, மே 8- தொப்பூர் கணவாய் பகுதியில் வாகனங் களை நிறுத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், சாலையோரங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வாக னங்கள் நிற்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் உள்ளது. மலைக்குன்றுகளால் சூழப்பட்டுள்ள தொப்பூர் கணவாயின் வழி யாக, சேலம் - பெங்களூரு தேசிய நெடுங் சாலை செல்கிறது. தினசரி இந்த கணவாயின் வழியாக லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சுங்கச்சாவடியிலிருந்து தொப்பூர் ரயில்வே இரட்டை பாலம் வரை, 8 கிலோ மீட்டர் தூரம் சாலை ஏற்றமும், இறக்க மாகவும், வளைந்தும் செல்கிறது. குறிப்பாக தொப்பூர் கணவாயில் 4 கிலோ மீட்டர் தூரம், மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்ட சாலையாக உள்ளது. தொப்பூர் கணவாயில் விபத்து ஏற்பட்டால், மணிக்கணக்கில் போக் குவரத்து பாதிக்கப்படுகிறது. பெரிய விபத்து என்றால், இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத் திற்கு மேல் வாகனங்கள் நகர முடியாமல் நிற் கின்றன. இந்த கணவாயில் வாகன விபத்து களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும், பல்வேறு நடவ டிக்கைகள் எடுத்து வருகின்றன. சாலையோரங்களில் ஆங்காங்கே விழிப் புணர்வு பலகைகள், பிரதிபலிப்பான் ஸ்டிக் கர், வேகத்தடை, ஒலிபெருக்கியில் எச்ச ரிக்கை செய்யப்படுகிறது. மேலும், வாகனங் களின் வேகத்தை குறைக்க கட்டமேடு பகுதி யில், சாலையில் இரும்பு பேரி கார்டுகள் அமைத்து, வேகத்தை குறைத்து செல்லும் படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நவீன கேமராவுடன் கருவிகள் அமைக்கப்பட்டு, விதிமுறைகளை மீறி வேக மாக வரும் வாகனங்களை கண்டறிந்து, அப ராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் விபத் துக்கள் எண்ணிக்கை குறைவதோடு, உயிரி ழப்பும் தடுக்கப்பட்டு, ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரே சமயத் தில் அடுத்தடுத்து 3 லாரி, 3 கார்கள் விபத்தில் சிக்கின. இதில் 2 ஓட்டுநர்கள் காயமடைந்த னர். 2 கன்டெய்னர் லாரிகள் மோதியதில் ஒரு வர் பலியானார். அதிகாரிகள் பல்வேறு நடவ டிக்கை எடுத்தாலும், விபத்துகள் தொடர் கதையாக உள்ளது. சாலையோரத்தில் வாக னங்களை நிறுத்துவதாலும், அதிகாலை நேரத் தில் அதிகப்படியான விபத்துக்கள் நடக் கிறது. இதனால், விபத்துக்களை தடுக்க தொப் பூர் கணவாய் பகுதியில், சாலையோரத் தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்தாத வகையில், தொப்பூர் கணவாய் காப்புக்காடு - தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில், பெரிய, பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளியை ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளர்
கோவை, மே 8- உன்ன மாதிரி ஆயிரம் பொம்பளைகளை பார்த்திருக்கேன் போ..! என மாற்றுத்திறனாளியை ஒருமையில் சிறையில் அடைப்பேன் என மிரட்டிய காவல் ஆய்வாளர் செயல் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவர், பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்குப் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனால், தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என குற்றஞ் சாட்டி ஆட்சியர் அலவலகம் முன்பு தர்ணாவில் அமர்ந்தார். இதனையடுத்து, மாற்றுத்திறனாளி பெண்ணிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பிவைத்தனர். அப்போது, இச்சம்பவத்தை பார்த்துக்கொண்டு, நுழைவாயிலில் இருந்து வேகமாக வந்த கோவை பந்தயசாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார், இந்த மனு நியாயமானதுதான், ஆனால் தேவையில்லாம உட்கார்ந்தா ரிமண்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை. உன்ன மாறி ஆயிரம் பொம்பளைகளை பார்த்திருக்கேன் போ என ஒருமை யில் மிரட்டினார். மேலும், மற் றொரு பெண் ஆய்வாளர் மாற்றுத் திறனாளி கையை பிடித்து இழுத் தார். அப்போது மாற்றுத்திறனாளி நிலை தடுமாறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முக்கித்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக முதல்வர் காவல்துறையோடு, மாற்றுத்திற னாளிகள் துறையும் சேர்ந்து கவ னித்து வருகிறார். காவல்துறை உங்கள் நண்பன் என திரும்பத் திரும்ப காவல்துறை அதிகாரிகள் பிரச்சாரம் செய்தாலும், இது போன்ற நண்பர்களின் செயல் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.
மண் அரிப்பால் சாலை சேதம்
ஈரோடு, மே 8- ஈரோட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவில் மழை பெய்து வெப்பத்தை தணிப்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்து வருகிறது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடையில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது. இந்நிலையில். ஈரோடு சத்தி சாலை, சூளை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்ததால், அங்கு சாலையோரமாக மழைநீர் வடிகால் பாலம் அமைக்கப்பட் டது. அங்கு மண் அரிப்பு ஏற்பட்டதால் சாலை சேதமடைந் தது. இதனால் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.