districts

img

மழையால் சாலையில் விழுந்த பழமையான புளியமரம்

அன்னூர், மே 30- அன்னூர் அருகே பலத்த காற்றுடன்  பெய்த மழையால் கோவை - சத்திய மங்கலம் சாலையில் நூற்றாண்டுகள் பழமையான ராட்சத புளியமரம் விழுந்த தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ் வாயன்று மாலை கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் வீசிய மழை காரண மாக இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணிப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி னர். பலத்த காற்றுடன் பெய்த கன மழை காரணமாக, அன்னூர் எல்லப்பாளை யம் பிரிவு பகுதியில் கோவை -  சத்திய மங்கலம் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த நூற்றாண்டுகள் பழமையான ராட்சத புளிய மரம் முறிந்து சாலை யில் விழுந்தது. இதனால் கோவை -  சத்தியமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல றிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தை அறுத்து அப் புறப்படுத்தினர்.