திருப்பூர், ஜூலை 8 - திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இறுதி ஊர்வலத்தில் பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்கு நிகழ்த்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குமார் என்பவரின் பெரியம்மா இந்தி ராணி (83). இவர் கடந்த 5ஆம் தேதி உடல்நலம் குன்றி உயிரி ழந்தார். இவரது உடலை பெண்கள் மட்டும் சுமந்து சென்று இறு திச் சடங்கு செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு நெகிழ்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. தாராபுரம் மின் மயானத்தில் எவ் வித ஜாதி மத சடங்குகளும் இன்றி பெண்களே இந்திராணி உடலை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டது. திரா விடர் கழக பெரியாரிய உணர்வாளர்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.