பாலக்காடு, வட்டப்பாறை இடத்தில் கரியமில வாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி விபத்துக் குள்ளானது. டேங்கரின் பின்புறம் உள்ள குழாய் வெடித்து கரியமில வாயு வெளியேறியது. எரி வாயு கசிவு காரணமாக, கோவை - திருச்சூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப் பட்டது. 2 மணி நேரம் கழித்து, நிலைமை சீரானது.