ஈரோடு, பிப்.17- ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் (RERA) திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார். உள்ளூர் திட்டமிடல் ஆணையத் தின் (டிடிசிபி) ஈரோடு மாஸ்டர் பிளான் இணையதளத்தை வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சனிக்கிழ மையன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தின் 80.71 சதுர கி.மீ நகர்ப்புற பகுதிகள் 731 சதுர கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் விலக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ப் பது குறித்து பொதுமக்களின் பரிந் துரைகள் பரிசீலிக்கப்படும். இத் திட்டம் ஈரோடு மாவட்டம் முழுவ தும் உள்ளது. 2016ஆம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப் படாத லேஅவுட்கள் மற்றும் மனை களை முறைப்படுத்த பிப்ரவரி 29ஆம் தேதி கடைசி நாளாகும். 2016ஆம் ஆண்டுக்கு முன் வாங்கிய மனை உரிமையாளர்கள், ஒப்புதலுக்குப் பிறகு குடிமை வசதிக ளைப் பெறலாம். ஆனால், அங்கீ காரம் பெறாத மனைகளின் லே அவுட் உரிமையாளர்கள் 10 சதவீத நிலத்தை அரசிடம் ஒப்படைத்து அனு மதி பெறலாம். சமீபத்தில் சென்னை யில் 43 கோரிக்கைகளுடன் 150 ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தன்னை சந்தித்ததாகவும், அதில் 18 கோரிக் கைகள் அரசு விதிகளின்படி வராத தால் நிராகரிக்கப்பட்டது. இதனடிப் படையில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டத்தில் (RERA) சில விதி கள் திருத்தப்பட்டு, சட்டத்திலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும். கட்டிடங்களின் உயரத்தை 12 மீட்ட ரிலிருந்து 14 மீட்டராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனும திக்கப்படுகிறது. திறந்தவெளி இருப்பு விதிமுறைகளில் எந்த தளர் வும் செய்யப்பட மாட்டாது என்றார்.