திருப்பூர், ஏப்.15– இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி யவரும், சாதி ஒழிப்பு போராளியுமான டாக்டர் அம்பேத்கரின் 132ஆவது பிறந்த நாள் விழா திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளியன்று அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு நடைபெற்றது. ஈஸ்வரன் கோயில் வீதி பூக்கடை முக்கு அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னணியின் மாவட் டத் தலைவர் ச. நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் அம்பேத்கரின் சிலைக்கு முழக்கங்களுக்கு இடையே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மக்கள் ஒற்றுமை, அரசியல் சாசன பாதுகாப்பு, தீண் டாமை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறு திமொழி ஏற்றனர். இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ், துணைச் செயலாளர்கள் எஸ்.சண்மு கம், ஞானசேகர், மூத்த தோழர்கள் பி.முத்து சாமி, ஆர்.ஈஸ்வரன், சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி. சம்பத், மாற்றுத் திற னாளிகள் சங்க நிர்வாகி சஞ்சீவ், திராவிடர் விடுதலை இயக்கத் தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், தமிழ்நாடு தாழ்த்தப் பட்டோர் நல உரிமை இயக்க மாநிலச் செயலா ளர் பன்னீர்செல்வம், தையல் சங்க நிர்வாகி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
ஊத்துக்குளி தாலுகா
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஊத் துக்குளி தாலுகா, நடுப்பட்டி கிளை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தாலுகா கமிட்டி உறுப்பினர் மு.பழ னிசாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் தாலுகா செயலாளர் க.பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஊத்துக்குளி கமிட்டி அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ஆர். மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை சார்பில் உறுதிமொழி நிகழ்வு நடை பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் என்று அறிவித்து, இந்நன்னாளில் சாதி பேதங்களை மறந்து சமத்துவத்தை காண் போம் என்ற உறுதிமொழி எடுக்கபட்டது. இந் நிகழ்வில், அவிநாசி பேரூராட்சி தலைவர் தன லட்சுமி பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சி.ப.சிவப்பிரகாஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் க.மணி, ஒன்றிய செயலா ளர் ப.ரங்கசாமி, விடுதலை செல்வன், திரா விட தளம் செந்தில், காங்கிரஸ் கட்சி வழக்கறி ஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி முரு கேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடுகபாளையம் கிளை சார்பில் அம் பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.