திருப்பூர், டிச.28 - அமராவதி அணை நிரம்பியுள்ளதால் மீன் பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப் பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த நவம் பர் மாதம் அணை நிரம்பியதை தொடர்ந்து, தற்போது பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் சனியன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடி யில் 89.70 அடியாக உள்ளது. நீர் வரத்து வினா டிக்கு 392 கனஅடியாக உள்ளது. அதேசமயம் நீர் திறப்பு 192 கன அடியாக உள்ளது. இந்த அணையில் மீன் பிடித்து வாழ்வாதாரம் நடத் துபவர்களும் உள்ளனர். தற்போது அமரா வதி அணையில் நீர் நிரம்பி உள்ளதால், மீன் பிடிப்பு பாதித்துள்ளது. அணையில் மீன் வளர்ச்சிக் கழகம் மூலம் திலேபியா, மிரு கால், ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சுகள் வளர்க் கப்பட்டு மீனவர்கள் வாயிலாக பிடிக்கப்படு கிறது. மீனவர்கள் பரிசல் வாயிலாக, மீன் பிடித்து வருகின்றனர். இதற்காக, ஒரு மீன வர், ஒரு உதவியாளர் என இருவரை கொண்ட, 20 பரிசல்கள் உள்ளன. தினமும் அணையில் மீன் வலை விரிக்கப்பட்டு, அதி காலை வலை சேகரிக்கப்பட்டு, அணைப்ப குதியிலுள்ள மீன் வளர்ச்சிக்கழக பண்ணை மற்றும் நகர பகுதியிலுள்ள மீன் வளர்ச்சி கழக கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக் கப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், அமராவதி அணை நீர்மட்டம முழு கொள்ள ளவில் உள்ளதால், வலையில் அதிக மீன்கள் சிக்குவதில்லை. இதனால் டேம் மீன் விருப்பி உண்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அமராவதி அணையில் கட்லா, ரோகு, மிரு கால், ஜிலேபி உள்ளிட்ட வகை மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீன்கள் அமராவதியில் உள்ள மீன் வளர்ச்சி கழக ஸ்டால் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஸ்டால்களிலும் விற்பனை செய்யப்படு கின்றன. அமராவதி டேம் மீன்கள் மிகவும் ருசி யாகவும், விலை குறைவாகவும் இருப்ப தால், ஏராளமானோர் விரும்பி சாப்பிடு கின்றனர். குறிப்பாக, கேரள மாநிலம் மறை யூர், கோவில்கடவு உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவு பொதுமக்கள் நேரடி யாக வந்து மீன்களை வாங்கி செல்கின்ற னர். வழக்கமாக அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருக்கும்போது, மீன்கள் அதிகம் வலையில் சிக்குவதில்லை. அணை யின் அடிப்பாகத்துக்கு சென்றுவிடும். நீர்மட் டம் குறைவாக இருக்கும்போது தான் அதிக ளவு மீன்கள் வலையில் சிக்கும். தற்போது அமராவதி அணை நீர்மட்டம் அதிகளவு உள் ளது. இதனால், மீனவர்கள் விரிக்கும் வலை யில் மீன்கள் சிக்கவில்லை. இதனால் வரு மானம் குறைந்துள்ளது என தெரிவித்தனர்.