districts

img

முன்னாள் மாணவ, மாணவர்கள் சந்திப்பு

 நாமக்கல், டிச. 4- குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1978 முதல் 1980 வரையிலான நாட்க ளில் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்கள் 43 ஆண்டு களுக்கு பின் முதன் முதலாக ஒன்று சேர்ந்த நிகழ்ச்சி  ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை ஆசிரி யர் ஆடலரசு  அங்கப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஒவ் வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்ப வங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.  இறுதியில், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபகரணங்கள் வாங்கி தருவது, புதிதாக பள்ளிக்கு வர வுள்ள மாணவ, மாணவியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப் பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவை யான உதவிகளை தற்போதுள்ள மாணவ, மாணவியர்க ளுக்கு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதாக முடிவு செய்தனர்.