districts

img

23 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

தருமபுரி, ஆக.8- காவிரி ஆற்றில் நீர்வரத்து விநா டிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந் துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநி லங்களின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த தன் காரணமாக கபிணி மற்றும் கிருஷ் ணராஜ சாகர் அணைகளுக்கு வரும்  நீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.30 லட்சம் கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர் நீர்வ ரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக் கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கடந்த 23 நாட்களாக தரும புரி மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மற் றும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வ தற்கும் தடை விதித்திருந்தது. தற்போது காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து, வியாழனன்று நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடி யாக வந்து கொண்டிருக்கிறது. இந்நி லையில், 23 நாட்களுக்கு பிறகு ஒகேனக் கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கு வதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோர், ஒகேனக்கல் சின் னாறு பரிசல் துறையில் இருந்து மணல் மேடு வரை பரிசல் பயணத்தினை தொடங்கி வைத்தனர். இதனால் சுற்று லாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்த னர். மேலும், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பகுதியில் வெள்ளத்தால் அடித்து வரப் பெற்ற குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை நீடிக் கிறது. இப்பணி முடிவடைந்த பின்னர் வெள்ளியன்று (இன்று) முதல் குளிக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வா கம் தெரிவித்துள்ளது.