தருமபுரி, மே 22- விவசாய பயன்பாட்டிற்கு வண் டல் மண் எடுக்க அனுமதித்திட வேண்டும் என தருமபுரியில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட் டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி னர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட் சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், தரும புரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் வேளாண் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். திருப்பத்தூர், மோகனூர் கரும்பு ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான தொகையை பெற்றுத்தர வேண் டும். சிறுதானியங்களை நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். வனவிலங்குகள் விளைநிலங் களுக்குள் புகுவதை தடுத்திட வனத் துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். என இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில், விவசாயிகளுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க, பொதுப் பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ள 21 ஏரிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இதேபோல், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, விரை வில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். கரும்பு நிலுவைத் தொகை குறித்து, கரும்பு ஆலை அதிகாரிகளுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும். இதேபோல நில அளவீட்டுப் பணிகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் வழியாக அளவீடு செய்து வழங்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன என்றார். இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் சித்ரா விஜயன், வேளாண் இணை இயக்குநர் வந்தரேகா, கால்நடை பாரமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், தோட் டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.