நாமக்கல், செப். 11- ஏரியில் எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள் மட்டும் எடுக்க அனு மதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வேலாயுதம் தலை மையில் மோளியப்பள்ளி கிராம நிர் வாக அலுவலகத்தின் முன்பு புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்துக் குட்பட்ட திருச்செங்கோடு அருகே உள்ள மோளியப்பள்ளி கிராமத் தில் 120 ஏக்கரில் ஏரி உள்ளது. இந்த ஏரி தமிழக அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் விவசாயி கள் மண்ணை எடுத்துக் கொள்ள லாம் என மாவட்ட நிர்வாகம் அறி வித்திருந்தது. இந்நிலையில், விவ சாயிகளுக்கு அனுமதி வழங்கா மல் தனியார் கட்டுமான நிறுவனத் திற்கும், சாலை போடுவதற்காக வும், இங்கு மண் அள்ளப்படுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் புகார் தொிவித்திருந்தனர். தனியாருக்கு மண் எடுக்க அனு மதி வழங்கக் கூடாது என்றும் விவ சாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், அதிகமாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தியும், ஏரிக்கரைகள் பழுதடைந்து தண் ணீர் கசிவு ஏற்படுகிறது, இந்த கரை களை பலப்படுத்த வேண்டும், மதகு கள் சிதிலமடைந்துள்ளது அதனை யும் சீர்ப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், ஏ. ஆதிநாராயணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க செயலாளர் படைவீடு பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் கே.பூபதி, சிஐடியு சங்க நிர்வாகி ஐ.ராயப்பன், அரசு ஊழியர் சங்கத் தின் முன்னாள் மாவட்டச் செயலா ளர் கே.எஸ்.இளங்கோவன், உள் ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தில் 40 பெண்கள் உள்ளிட்ட 150க் கும் மேற்பட்ட விவசாயிகள் பொது மக்கள் பங்கேற்றனர்.