ஈரோடு, ஜூன் 15- வார ஓய்வை 48 மணி நேரமாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் இன்ஜின் ஓட்டுநர்களின் வார ஓய்வை 48 மணி நேரமாக வழங்க வேண் டும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்ன ரும் அந்நேரத்தை ரயில்வே நிர்வாகம் தர மறுக்கிறது.
அதேபோல, நாடாளுமன்றத் தில் ஒப்புக் கொண்டவாறு வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொடர் இரவு பணியை 2 நாளாக குறைக்க வேண்டும். வீட்டைவிட்டு வேலைக்கு செல்லும் ரயில் ஓட் டுநர்கள் 2 நாளில் வீடு திரும்புமாறு பணியை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வி.யு.சிவகுமார், பொதுச் செய லாளர் கே.சி.ஜேம்ஸ் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி, டிஆர் இயு பிஜூ, எம்.முருகேசன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் சி.முருகேசன் ஆகி யோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.