districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி உதகை, மார்ச் 15- ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய சூண்டி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில், யானை கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவதும், மக்களை தாக்கும் சம்பவங்க ளும் அவ்வப்போது நடைபெறுகின்றன. இந்நிலை யில், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரிய சூண்டி பகுதி யில் இரவு நேரத்தில் உலா வந்த யானை பிரசாந்த் (24) என்பவரை தாக்கியது. பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், யனையை விரட்டி விட்டு, பிரசாந்தை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், தீவிர சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீதிமன்ற கட்டிடம் கட்ட ரூ.14.59 கோடி ஒதுக்கீடு

நீதிமன்ற கட்டிடம் கட்ட ரூ.14.59 கோடி ஒதுக்கீடு கோவை, மார்ச் 15- பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கி ணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு, கூடுதல் வசதி ஏற்ப டுத்தி தர ரூ. 14 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆச்சிப்பட்டியில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, மேடையில் பேசிய அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த நிலையில், பொள்ளாச்சியில் தற்போது கட்டப் பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு கூடு தல் வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலனை செய்த முதல்வர், மேற்படி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டி டத்திற்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏது வாக, ரூ. 14 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்.

சின்னாற்றுப் படுகையில் உறிஞ்சுக்கிணறு

சின்னாற்றுப் படுகையில் உறிஞ்சுக்கிணறு தருமபுரி, மார்ச் 15- சின்னாற்றுப் படுகையில் குடிநீர் உறிஞ்சுக்கிணறு அமைக்கும் இடங்களை பென்னாகரம் சட்டமன்ற உறுப் பினர் ஜி.கே.மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிப் பகுதிகளில் வறட்சிக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாட் டைத் தீர்க்கும் வகையில், அம்ருத் திட்டத்தின் கீழ் சின் னாற்றுப் படுகையில் இருந்து உறிஞ்சுக்கிணறு அமைக் கும் இடங்கள், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கிணறு கள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், பென்னாகரம் பேரூராட்சிப் பகுதியில் கோடை காலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கிடும் வகையில், ரூ.19.46 லட்சத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் சின்னாற்றுப் படுகையில் நீர் உறிஞ்சும் கிணறு, குழாய் அமைக்கும் பணிக்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பென் னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தைத்தோப்பு, நீர் குந்தி, கிருஷ்ணாபுரம், எட்டியாம்பட்டி, போடூர் உள் ளிட்ட ஆறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஓர் இடத்தில் 2.50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைப்ப தற்கான தொட்டி என நாளொன்றுக்கு 11.70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக 6 மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே உள்ள 1,474 குடி யிருப்புகளும், புதிதாக 3,500 குடியிருப்புகளுக்கு 30  ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை  ஏற்படவுள்ளது. ஏற்கனவே சின்னாற்றுப் படுகையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அம்ருத் திட்டத்தின் மூலம் பென்னாகரம் பேரூ ராட்சிக்கு மட்டுமல்லாது பாப்பாரப்பட்டி பகுதிக்கும் குடி நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துறை சார்ந்த அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, என் றார்.

ஏரி பகுதியில் தீ விபத்து

ஏரி பகுதியில் தீ விபத்து சேலம், மார்ச் 15- சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள புளி யங்குச்சி ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந் தமான ஏரியில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது வெயில் காரணமாக தண்ணீர் வற்றி ஏரியில் செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் செடிகளுக்கு தீ வைத்து  சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள், கெங்க வல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) செல்ல பாண்டியன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும்: ஆட்சியர்

தருமபுரி, மார்ச் 15- வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என தருமபுரி ஆட்சி யர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வனத்தீத்தடுப்பு குறித்து வனத்துறை அலுவலர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்த்திற்கு தலைமை வகித்து ஆட்சி யர் கி.சாந்தி பேசுகையில், கோடை காலம்  என்பதால் அதிகளவில் வனத்தீ ஏற்பட வாய்ப் புள்ளதாகக் கருதப்படும் தருமபுரி, பாலக் கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகத்துக்குட்பட்ட காப்புக்காடு களைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீயணைப் புத் துறை பணியாளர்களுடன் இணைந்து காட் டுத்தீ தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும். மேலும், தாழ்வாகச் செல் லும் மின் கம்பிகள், மரங்களில் உரசி காட்டுத் தீ ஏற்படாத வகையில் தடுக்கும் பொருட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின் வாரிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். எவரேனும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ, வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப் புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர், வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து விவரங்கள் ஏதும் தெரிந்தால், 1800 425 4586 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், தகவல்  அளிப்பவர்களுக்கு அரசால் தக்க சன்மானம் வழங்கப்படுவதோடு, அவர்களின் விவரம் போன்றவை ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் காட்டுத்தீ குறித்த தகவ லைத் தெரிவிக்க 1800 425 4586 என்ற வனத் துறை இலவச தொலைபேசி எண்ணுக்கோ  அல்லது தங்களது கிராம நிர்வாக அலுவல ருக்கோ, 101 என்ற தீயணைப்புத்துறை இல வச தொலைபேசி எண்ணுக்கோ தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல்

வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் தருமபுரி, மார்ச் 15- நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம், நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின் கீழ் சுமார் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை,  மின்சாரக்கம்பம், மின்விளக்குகள் மற்றும் ரேசன் கடை  அமைப்பது உள்ளிட்ட பணிகள் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் நார்த்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் என்.எஸ்.கலைச்செல்வன், மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், திமுக நிர்வாகிகள் ஏ.எஸ்.சண்முகம், கே.பி.மல்லமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிணறு அமைக்க எதிர்ப்பு 
கிணறு அமைக்க எதிர்ப்பு  உதகை, மார்ச் 15- கிணறு தோண்டப்பட்டால் தங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சியில் உள்ள கேசலாடா பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழங்குடியினர் மட்டுமின்றி பல தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இங்கு, கேசலாட பகுதி யில் புதிய கிணறு அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிணறு தோண்டப்பட்டால் தங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக் குறை ஏற்படும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு ஊராட்சி அதி காரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கிணறு அமைத்தால் இரண்டு கிராமத்திற்கும் குடிநீர் சீராக வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.

செல்லம்மாள் காலனி தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

திருப்பூர், மார்ச் 15 - திருப்பூர் மாநகராட்சி செல்லம்மாள் காலனி தொடக்கப்பள்ளியில் திங்களன்று ஆண்டுவிழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.  பள்ளித் தலைமை ஆசிரியர் வே.நாகராஜ்  கணேஷ் குமார் வரவேற்றார். 24ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் இரா.நாகராஜ் இவ்வி ழாவிற்கு தலைமை ஏற்றார். திருப்பூர் வர் டாரக் கல்வி அலுவலர் முஷ்ரக் பேகம், முன் னாள் மாமன்ற உறுப்பினர் இரா.சின்னச்சாமி,  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன். பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் இ.மோகனா முன்னிலை வகித்த னர். பள்ளி வளாகத்தின் முன்  நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடனமாடி னர்.  அத்தோடு தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு, பாடல் பாடுதல் என மிகச் சிறப்பாக  செய்தனர். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட் டது.  மாவட்ட அளவில் சிலம்பம், கராத்தே,  ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சிறந்த நன் கொடையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் ஆர்.நாகராஜுக்கு வட் டாரக் கல்வி அலுவலர் அரசின் நினைவுப் பரிசை வழங்கினார்.  பெற்றோர்களும், பொது மக்களும்,  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்க ளும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வினை  ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு,  சோழன் தமிழ் அறக்கட்டளை உறுப்பினர் களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்நிகழ்வில் ஆசிரியை கோ.விஜயலெட் சுமி நன்றி கூறினார்.

பாஜக தேர்தல் பத்திர வசூல்; பூனைக்குட்டி வெளியே வந்தது: அமைச்சர் தாக்கு

திருப்பூர், மார்ச் 15 - பூனைக்குட்டி வெளியே வந்தது என்பது  போல பாஜக ஆட்சியைப் பயன்படுத்தி தேர் தல் பத்திரத்தில் வசூல் செய்திருப்பது அம்ப லமாகியிருக்கிறது என்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி யில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தினசரி சந்தை கடைகள், ரூ. 59 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட இருசக்கர வாகனம் நிறுத் தம் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ்  ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப  சுகாதார நிலையம் என ரூ.3 கோடியே 39 லட் சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை வெள்ளின்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பூனைக்குட்டி வெளியே  வந்தது என்பது போல ஆட்சியை பயன் படுத்தி பாஜக நன்கொடை பெற்றதற்கு தேர் தல் பத்திரமே ஒரு உதாரணம். பொள்ளாச் சியில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளக் கூடிய அரசு விழா நடைபெற்றபோது, அர சியல் நோக்கத்திற்காக ஆளுநர் திருப்பூர் வருகை தந்திருக்கிறார்.  பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் கூடுதலாக எலும்பு முறிவு சிகிச்சை மையம் கட்ட தமிழக முதல்வர் பொள்ளாச்சியில் அறிவித்திருக்கிறார். அங்கு முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்தது. அத்துடன் ஆளுநர் வருகை குறித்த முறையாக தமிழக அர சுக்கு தெரியப்படுத்தவில்லை. ஓரிரு நாட்களில் திமுக மற்றும் தோழ மைக் கட்சி தலைவர்கள் வேட்பாளர் தேர்வை  முழுமையாக முடித்து பிரச்சார பயணத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.

தொழிலாளர் நலவாரிய அலுவலகம் கட்டப்பட்டு  ஓர் ஆண்டு ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது

முதல்வருக்கு சிஐடியூ மனு தாராபுரம், மார்ச். 15 - திருப்பூரில் புதிய மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவ லகம் கட்டி முடிக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகிய நிலையில் இன் னும் திறக்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக திறக்க  கோரி சிஐடியூ சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. தாராபுரம் தாலூகா பொது தொழிலாளர் சங்கத்தின் செய லாளர் பி.பொன்னுச்சாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப் பதாவது, மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் சிறப் பான முறையில் செயல்பட வேண்டி, திருப்பூர் பழைய ஆர்டிஓ  அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு  ஓர் ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை திறக்கப்பட வில்லை. இதுகுறித்து துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், நெருக்கடி மிகுந்த திருப்பூர் காமராஜ் நகரில் உள்ள வாடகை கட்டி டத்தில் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் செயல்பட்டு வரு கிறது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளா கிவருகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் இருந்து போக்கு வரத்திற்கும் இடவசதியுடன் பயன்பாட்டிற்கு மிகவும் வசதி யாக அமைந்துள்ள புதிய கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குப்பைகளை எரித்து தீ விபத்து  நான்கு பேர் கைது

குப்பைகளை எரித்து தீ விபத்து  நான்கு பேர் கைது உதகை,மார்ச் 15- தோட்டத்தில் குப்பைகளை எரித்து தீ விபத்து ஏறப்படுத் தியை நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீ ரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்ப ளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி  கொடிகள் தீயில் கருகி சாம்பலாயின. மேலும் வனப்பகு தியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவை கள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன. இதுகுறித்து தகவல்  அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனா லும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும்  வனத்துக்குள் தீ விபத்து காரணமாக பரவி நிற்கும் அடர்ந்த  புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்தி ணறல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாரஸ்ட்டேல் காட்டுப்ப குதியில் பற்றியெரியும் தீயை ஹெலிகாப்படர் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த பகுதி யில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்களை குவித்து தீ வைத்து எரித்தனர். பின்பு தீயை  அணைக்காமல் சென்றது தெரியவந்தது. இதனைத்தொ டர்ந்து குன்னூர் வனத்தில் பற்றியெரிந்த தீ விபத்துக்கு காரண மாக இருந்ததாக பாரஸ்ட்டேல் தேயிலை தோட்ட உரிமையா ளர் எபினேசர் ஜெயசீலன் இன்பம் மற்றும் தொழிலாளர்கள் கருப்பையா(65), மோகன்(35), ஜெயக்குமார்(60) ஆகிய 4  பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

நிரந்தர மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் - கைது

நிரந்தர மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் - கைது தருமபுரி, மார்ச் 15- தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (40). கட்டடத் தொழிலாளியான இவர் புதிதாக கட்டிய தனது வீட்டுக்கு பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றக்கோரி, இண்டூரில் செயல்படும் மின்வாரிய உதவிப்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த அலுவல கத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பாலக்கோடு வட்டம், கடைமடை பகுதியைச் சேர்ந்த சசிகு மார் (48), வடிவேலுவின் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர  மின் இணைப்பாக மாற்றித்தர ரூ.20 ஆயிரம் லஞ்சம்  கேட்டுள்ளார். பின்னர் ரூ.15 ஆயிரம் தரக்கோரியுள்ளார். லஞ்சம் தர விரும்பாத வடிவேல், தருமபுரி ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்புப்பிரிவு காவல் நிலையத்தில் புகார ளித்துள்ளார். இதையடுத்து போலீசாரின் வழிகாட்டுதல்படி ரூ.15 ஆயிரத்தை வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமாரி டம் அவரது அலுவலகத்தில் வடிவேல் கொடுத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு ஆய்வாளர் பெருமாள் தலை மையிலான போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறைக்கு  அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்!

சேலம், மார்ச் 15- தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதி யம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தேசிய தூய்மைப் பணி யாளர்களுக்கான ஆணையத் தலைவர் அறி வுறுத்தியுள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் ரா.பிருந் தாதேவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேசிய தூய்மைப் பணியாளர்களுக் கான ஆணையத் தலைவர் எம்.வெங்கடே சன் தலைமை வகித்து பேசுகையில், இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், தாட்கோ, ஆதிதிரா விடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ்  பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியா ளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, ஊதியம், முழு உடற்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள், அடிப்படை மற்றும் பாது காப்பு வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியா ளர்களுக்கான அனைத்து திட்டங்களையும் அலுவலர்கள் முறையாக செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள், பணி ஓய்வுக்குரிய பணப்ப லன் ஆகியவைகளை எந்தவித காலதாம தமுமின்றி சரிவர வழங்கிடவும் தொடர்பு டைய துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா? என்பதையும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரசிதழில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஊதியம் முழுமையாகக் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று, தூய்மைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட் டுவரும் பணியாளர்கள் மீது துறை அலுவ லர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்ட றிந்து உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு குறைகள் இருந்தால் 011-2464 8924 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு  கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.  இதனைத்தொடர்ந்து, 924 தூய்மைப் பணி யாளர்களுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான சீரு டைகள், தையற்கூலிகள் மற்றும் ரூ.9 லட்சம்  மதிப்பிலான தளவாடப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரிய  உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங் கப்பட்டன. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா ளர் சீ.பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலு வலர் பெ.மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.சுவாதிஸ்ரீ, துணை காவல் ஆணையர் பி.கே.ராஜேந்திரன், மாநகராட்சி துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் அரசு  அலுவலர்கள், விழிப்பு மற்றும் கண்காணிப் புக்குழு உறுப்பினர்கள், தூய்மைப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.