உதகை, டிச.13- உதகையில் சிறப்பு தேயிலைத்தூள் விற்பனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. தேயிலை அறுவடை எந்தி ரங்கள் கொள்முதல் செய்வது உட்பட தேயிலை வாரியத்திற்கு ரூ.1.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தென் னிந்திய தேயிலை வாரிய செயல் இயக் குநர் எம்.முத்துக்குமார் தெரிவித்துள் ளார். நீலகிரி மாவட்டம், உதகை பழைய ஆவின் பாலகம் அருகில் தேயிலை வாரியம் சார்பில், சிறப்பு தேயிலைத் தூள் விற்பனை மையம் தொடங்கப் பட்டு உள்ளது. இதனை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துக்குமார், ஆட்சியர் சா.ப. அம்ரித் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இதன்பின் தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துக் குமார் கூறுகையில், கோத்தகிரி தாலுகா விலுள்ள சிறு தேயிலை தொழிலாளர் களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், சிறு தேயிலை விவசாயி களுக்கான சிறப்பு தொகுப்பை செயல் படுத்தும் முகமையாகவும் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேயிலை வாரியத்திற்கு 2021-2022 ஆம் ஆண்டில் தமிழக அரசிடமிருந்து ரூ.1.21 கோடி ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு தேயிலை விவசாயிகளுக்கு கவாத்து எந்திரம் மற்றும் அறுவடை எந்திரங்கள் கொள் முதல் செய்வதற்கான உதவி, சிறு தேயிலை விவசாயிகள், உதவிக் குழுக்கள் இயற்கை வேளாண்மை மூலம் தயாரிக்கப்பட்ட சிறப்பு தேயிலை விற்பனை மையம் அமைப்பதற்கான சிறப்பு திட்டம் உட்பட 4 கூறுகளில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இயற்கை விவசாய நடவடிக்கைகளை இலக்காக கொண்டு உள்ளது. இதனால் வழக்க மான தேயிலைகளைவிட 3 முதல் 5 மடங்கு அதிக வருவாய் ஈட்டும் இயற்கை வேளாண்மை மூலம் தயா ரிக்கப்பட்ட சிறப்பு தேயிலைத்தூளின் தேவையை கருத்தில் கொண்டும், சிறு தேயிலை விவசாயிகளால் விற்பனை மையங்கள் அமைப்பதற்கான சிறப்பு திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோத்தகிரி தாலுகாவில் 3 சிறப்பு தேயிலை விற்பனை மையங்கள் சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் ஒட்டு மொத்த தேயிலைத் தொழிலின் மேம் பாட்டிற்காக திறக்க திட்டமிடப்பட் டுள்ளது, என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, உதகை கோட்டாட்சியர் துரைசாமி, ஆவின் பொது மேலாளர் வெங்கடாச்சலம், குன்னூர் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஷ்வரி, உதவி இயக்குநர் செல்வம், வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.