பொள்ளாச்சி, ஜன.12- சாதிய ஆதிக்கத்தின் காரணமாக, பழங்குடியின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும், பொள்ளாச்சி பகுதி யில் பல்வேறு இடங்களில் தீண்டாமை கொடுமை நிலவுவதாக மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் பொள்ளாச்சி மாவட்ட சார் ஆட்சியரிடம் மனு அளித்த னர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக் குட்பட்ட ஆர்.பொன்னாபுரம் சத்யராஜ் நகரில், நரிகுறவ இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்ற னர். இப்பகுதியில், விக்னேஷ்வரா மற்றும் எஸ்சிடி என்ற இரண்டு தனி யார் மினி பேருந்துகள் இயங்கி வருகின் றன. இந்நிலையில், இவ்விரு பேருந்துக ளும், நரிகுறவ மக்கள் வசிக்கும் பகுதியில், பெரும்பாலான நேரங்களில் நிற்காமல் செல்கிறது. மேலும், நரிகுறவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் யாரையும் முன் பகுதியில் அமரக்கூட பேருந்து ஊழியர்கள் அனுமதிப்பதில்லை. கேள்வி கேட்டால், அனைவரையும் சாதி ஆதிக்க மனநிலையில் பேசு கின்றனர்.
இம்மக்களிடம் கூடுதல் கட்டணத்தையும் வசூல் செய்வதாக வும் தெரிகிறது. இதேபோன்று, கொல் லுப்பாளையம் கிராமப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூக மக்க ளும், தீண்டாமை பிரச்சனையை அனு பவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கேவிகே, சித்ரா, ஏபிடி என்ற தனி யார் பேருந்துகளும் ”14” எண் கொண்ட அரசு பேருந்தும் நின்று செல்வ தில்லை. எனவே, கொல்லுப்பாளையம் பகுதிகளில் பேருந்தை நிறுத்தி அனைத்து சமூக மக்களையும், எவ் வித தீண்டாமையும் இன்றி, சமமாக ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்யராஜ் நகர் பகுதியில் வசிக்கும் 32 குடும்பங்களுக்கு வழங் கப்பட்ட நிலப்பட்டாவுக்கு, இடத்தை காண்பித்து சர்வே செய்து கொடுக்க வேண்டும். ஆர். பொன்னாவரம், சத்ய ராஜ் நகரில் தெருவிளக்கு, கான்கிரீட் சாலை உடனடியாக அமைக்க வேண் டும். மோசமான நிலையில் சிதிலடைந் துள்ள தொகுப்பு வீடுகளை சரிசெய்து தரவேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாலுகாச் செயலாளர் மணியா ழன், தாலுகாப் பொருளாளர் எஸ்.அழ கர் ஆகியோர் திரளான நரிக்குறவ சமூக மக்களுடன் இணைந்து மனு அளித்தனர்.