தருமபுரி மே 11- தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித் தும் உதவித்தொகை வழங்கவில்லை என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தருமபுரி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் மாற் றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஓராண்டாகியும் மனுவின் மீது நடவடிக்கை இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள் ளது. எனவே இவர்களின் வறுமை நிலை மையை கணக்கில் கொண்டு உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, மாவட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள் ளனர். இவர்களின் மனுக்களை உடனடி யாக பரீசீலனை செய்து முன்னுரிமை அடிப் படையில் இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வறுமைகோட்டின் கீழ் பட்டி யலில் இணைத்து, இவர்களின் குடும்ப அட்டையை அந்தியோதயா அன்னயோ ஜனா திட்டத்தின் கீழ் மாற்றி 35 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. எனவே, அதன்படி இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும், குடும்ப அட்டையை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்னாகரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிக ளுக்கென கழிவறை அமைக்க வேண்டும். இதனை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், மாவட்ட நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.