districts

img

இந்து முன்னணியுடன் கைகோர்க்கும் செயல் அலுவலர் அனைத்து அரசியல் கட்சிகள் கண்டனம்

அவிநாசி, ஆக. 28 – திருமுருகன்பூண்டி திருமுருகநா தர் கோயில் செயல் அலுவலர் விமலா  இந்து முன்னணி மதவாத அமைப்புடன் கைகோர்த்துக் கொண்டு பொது மக்க ளுக்கு விரோதமாக அராஜகமாக செயல்பட்டு வருவதற்கு அனைத்து அர சியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன.  திருமுருகன் பூண்டியில், நகர்மன் றத் தலைவர் குமார் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக நகரச் செயலாளர் மூர்த்தி, அதி முக நிர்வாகி ராஜேந்திரன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர்  ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப் பினர் வெங்கடாசலம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பூண்டி கிளைச் செயலாளர்  நஞ்சப்பன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி தட்சணாமூர்த்தி, தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சி நிர்வாகி  நாகராஜ், நாம் தமிழர் கட்சி சம்பத்  மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், நகர்மன்றக்குழுத் தலைவர் சுப்பிரமணி யம், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் விமலா கோவில் அதிகாரி போல் செயல் படாமல் இந்து முன்னணி நிர்வாகி  போல் செயல்பட்டதை வண்மையாக  கண்டிக்கின்றோம். இப்பிரச்சனைக ளுக்கு எல்லாம் காரணமாக இருந்த கோவில் செயல் அலுவலர் விமலா மீது  துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த  பிரச்சனை குறித்து சமூக ஊடகங்களில்  தவறான தகவலைப் பரப்பி வரும் இந்து  முன்னணி அமைப்பினர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தினர். அத்துடன் எதிர்வரும் காலத்தில் அனைத்துக் கட்சியினரும் கட்சி பேத மின்றி, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைக ளுக்கு அனைவரும் கைகோர்த்து நிற் போம் என்று கூறினர்.