districts

img

கோயில் செயல் அலுவலரின் மக்கள் விரோத நடவடிக்கை

அவிநாசி, ஆக.28- மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும், திருமுருகநாதர் கோயில் செயல் அலு வலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியி னர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜை சந் தித்து வலியுறுத்தினர். திருமுருகன்பூண்டி திமுக நகரச் செய லாளர் டி.கிருஷ்ணசாமி (எ) மூர்த்தி, நகர் மன்றத் தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் நகர்மன்ற குழுத்தலைவர் மற்றும்  பூண்டி கிளைச் செயலாளர் பி.சுப்பிரமணி யம், அதிமுக 6ஆவது வார்டு நகர்மன்ற உறுப் பினர் என்.நடராஜ், 5ஆவது வார்டு உறுப்பி னர் தனலட்சுமி ஜோதிமணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகி பி.சரவணன், காங்கிரஸ்  நிர்வாகி டி.எஸ்.தட்சிணாமூர்த்தி, கொமதேக நிர்வாகி ப.சென்னியப்பன், மார்க்சிஸ்ட் கட்சி  அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் பால சுப்பிரமணியம், பி.சிவக்குமார், சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் வி.நடராஜன், திமுக எம். பெரியசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். இதில், திருமுருகன்பூண்டி திருமுருக நாதர் கோயில் அருகில், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் பொது நூலகம் உள் ளது. இந்த சாலையை ஒட்டி பல ஆண்டுகளா கக் குடியிருந்து வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்வாய் கட்டும் பணி பூண்டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்டது. பாதி வேலை முடியும் தரு வாயில், திருமுருகநாதர் கோயில் செயல் அலுவலர் விமலா, கால்வாய் கட்டும் இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்று தடுத்து நிறுத்தினார்.

ஏற்கெனவே கோயிலுக்குச் சொந்தமான இடம் முழுவதும் வேலி அமைத்து பாதுகாக் கப்பட்டு வருகிறது. கால்வாய் கட்டும் பணி அந்த இடத்துக்கு வெளிப்புறமாகத்தான் நடைபெறுகிறது. பணி நிறுத்தப்பட்டவுடன், ஒரு மாதம் கழித்து வந்த செயல் அலுவலர் அந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் மூடினார். இதனால் குடிநீர் குழாய்கள் முழு வதும் உடைந்துள்ளது. இதனால், பொது மக் கள் மற்றும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குடி நீர் தடைப்பட்டது. இதனைத் தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களைச் செயல் அலுவலரும், அவரது கணவரும் தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்குவதற்கு முயற்சித்தனர். அதன் பிறகு காவல் துறையினர் தலையிட்டு நிலை மையை சரி செய்தனர். பல ஆண்டுகளாக உரிய ஆவணத்துடன் குடியிருந்து வரும் மக்களின் வீடுகளை இடித் துத் தள்ளுவேன் என்று மதவாத சக்திகளின் துணையோடு செயல்படும் செயல் அலுவலர்  கூறி வருகிறார். பல ஆண்டுகளாக செயல் பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள் ளிக்கு நகராட்சியால் புதுப்பிக்கப்படும் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்த முயலும் செயலி லும் அவர் ஈடுபடுகிறார். எனவே சம்பந்தப் பட்ட செயல் அலுவலர் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமன தாக வலியுறுத்தினர். மேலும் தற்காலிகமாக அப்பகுதி கழிவு நீரை அருகில் உள்ள நூலக காம்பவுண்டிற் குள் சோக்பிட் அமைத்து விடப்பட்டுள்ளதால் நூலகக் கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படுவது டன், அங்கு படிக்க வரும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால் வாயை ஏர்கெனவே உள்ள பொதுக் கழிப் பிடத்தில் இருந்து செல்லும் கால்வாயுடன் இணைத்து கழிவுநீர் வெளியேற ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண் டனர்.  மேலும், இப்பிரச்சனை குறித்து சமூக  வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்பிவரும் மதவாத சக்திகள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். மனு வைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர் விமலா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும், அத்துடன் அறநிலையத் துறை இணை ஆணையரிடம் இக்கோரிக் கையை அளிக்கும்படியும் கூறினார். கால் வாய் அமைக்கும் இடம் தொடர்பான பிரச்ச னையில் வட்டாட்சியரிடம் கூட்டம் நடத்தச் சொல்லி, அந்த இடத்தை அளந்து உரிய  தீர்வு காணவும், தானே நேரில் வந்து அங்கு  பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உறுதியளித்தார்.