districts

img

முறைகேடுகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்! தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேசம்

ஈரோடு, ஜுன் 22- முறைகேடுகளின் மொத்த உருவ மாய் திகழும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக் கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நீட் தேர்வு தொடங்கிய நாள் முதல் பல்வேறு முறைகேடுகளும், குளறு படிகளும் நடைபெற்று வருகிறது. மருத்துவராக வேண்டும் என்கிற கனவுகளை சுமந்து கல்வி கற்கும் மாணவர்கள், நீட் என்கிற கொடும் தேர்வினால் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான ரூபாய் பணம் இருந்தால் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற நிலை உருவாகி யுள்ளது. நீட் தேர்விற்கு புனிதப் பட்டம் கட்டிய பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள், தமிழகம் மட்டுமே எதிர்ப்பதாக பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நீட் தேர்விற்கான முடிவுகள் வெளிவந்தபோது, இதில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, தற்போது நாடு முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரு கிறது. நீட்தேர்விற்கு எதிராக மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், வாலிபர், மாதர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடி வரு கிறது. தற்போது நீட்தேர்வு முறைகேடு கள் ஆதராப்பூர்வமாக அம்பலமான நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  இதன்தொடர்ச்சியாக, ஈரோடு மா வட்டம் பவானி, அந்தியூர் பிரிவு சாலை யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் திராளானோர் பங்கேற்றனர். பெருந்துறை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் முத்து பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வ நாதன், முன்னாள் மாவட்ட செயற்குழு கே.குப்புசாமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் நவீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  கோபி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தா லுகா செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எம்.கே.நடராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். டி.என்.பாளையத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்தி  ஒன்றியப் பொறுப்பாளர் செளந்திர் ராஜன் தலைமையில் பலர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

இதேபோன்று, நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி முன்னாள் மாவட்ட செயலா ளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்.எம். அசோகன், என்.வேலுசாமி, கே தங்கமணி,பி.ஜெயமணி, எஸ்.சுரேஷ்,ஏ. டி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.கு மார் தலைமை வகித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.சின்னசாமி, வி.ரவி, ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், ஒன்றியச் செயலா ளர்கள் சி.முரளி, கே.கந்தசாமி, டி.எஸ். ராமச்சந்திரன், ஆர்.வெங்கடாச்சலம், ஜி.சக்திவேல், என்.பி.முருகன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் புதிய பேருந்து நிலையத் தில் வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் பாலகுமாரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரக் குழு செயலாளர் பி.ஆர். கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்  வை.ஆனந் தன், ஒன்றியக் குழு உறுப்பினர் சௌந் தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ் கனகராஜ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுதா, மருத்துவர் நேரு பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத் மநாபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே வெள்ளியங்கிரி, கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் யு.கே.சிவஞானம், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, அஜய் குமார், என்.ஆர்.முருகேசன், ஆறுச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.தெய்வேந்திரன் நன்றி கூறி னார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி திரு வள்ளுவர் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இக்கூட்டமைப் பின் நிர்வாகிகள், த.அருளானந்தம், ஆர்.வடிவேல்குமார், ப.குமரகுரு பரன், அ.தங்கபாசு, கே.சாலமன்ராஜ், த.சரவணக்குமார் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.