சேலம், ஜூலை 31- மோடி அரசின் விவசாய விரோத பட் ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவ தும் விவசாயிகள் சங்கத்தினர் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு இடங் களில் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளின் நீண்டகால கோரிக் கையான உத்தரவாதமான கொள் முதல் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட் டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான உத்தியோக பூர்வ பதிவுகளின்படி, இந் தியாவில் தினமும் 31 விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள். சுமார் ரூ.2 லட்சம் கோடி உபரியாக இருந்த போதிலும் விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்களுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.14.46 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய மோடி அரசு. மேலும் ரூ.10.2 லட்சம் கோடியை திவால் மற்றும் திவால் குறி யீடு மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் களுக்கு கடன் தள்ளுபடி செய்ய வில்லை. விவசாயிகளின் இடுபொருட் களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கா மல், கார்ப்பரேட்டுகளுக்கு 5% வரி சலுகை வழங்குகிறது. 2024-25 ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.48.25 லட்சம் மதிப்பீட்டில் ரூ.1,51,851 கோடி அல்லது வெறும் 3.15% விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைக்கு ஒதுக்கி உள்ளது. கடந்த கால பட்ஜெட்களில் 2019-20ல் 5.44%, 2020-21ல் 5.08%, 2021-22 ல் 4.26% மற்றும் 2022-23 இல் 3.23% என குறைந்துள்ளது. ஒன்றிய பாஜக அர சின் மக்கள் விரோத, விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் ஆவேச போராட்டத்திற்கு ஐக்கிய விவ சாயிகள் சங்கம் அறைகூவல் விடுத் திருந்தது. இதன்ஒருபகுதியாக, தமிழகத்தில் பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள் ஆவேசத்துடன் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டிணம், பனமரத்துப்பட்டி, ஓமலூர், காடையாம் பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒன் றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்டத் தலைவர் அன்பழ கன், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, பால் உற்பத்தியாளர் சங்க மாவட் டச் செயலாளர் பி.அரியா கவுண்டர், தாலுகா தலைவர் இலா.கலைமணி, ஐக் கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகி என்.கே. செல்வராஜ், மாநில ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினர் சந்திரமோ கன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன் உள்ளிட்ட தலைவர்கள் தலை மையில் இப்போராட்டங்கள் நடை பெற்றது.
தருமபுரி
இதேபோன்று, ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் தருமபுரி மாவட் டத்தில் 100 இடங்களில் ஒன்றிய பட் ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது. இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சோ. அருச்சுனன், கோவிந்தராஜ், முத்துக்குமார், கிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம். குமார், துணைச்செயலாளர் ஆ.ஜீவா னந்தம், பொருளாளர் சி.வஞ்சி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தீர்த்தகிரி, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து, நிர்வாகிகள் இ.கே.முருகன், கும ரேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் நடைபெற்ற பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்திற்கு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டச் செயலாளர்கள் ஆர்.குமார், எஸ்.சின்னசாமி ஆகியோர் தலைமை வகித் தனர். இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஏ.பஞ்சலிங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் கோபால் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில், பட்ஜெட் நகலை எரிக்க முயலும் போது காவல்துறையினர் தடுத்து கைப்பற்றினர். இந்த போராட் டத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.பி.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் துணை செய லாளர் எஸ்.வெங்கடாசலம் உட்பட ஏரா ளமான விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
இதேபோன்று, நாமக்கல் மாவட் டத்தில், திருச்செங்கோடு மோளிப் பள்ளி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், மல் லச்சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், ஏ.ஆதிநாராயணன், சி.பெரியசாமி, ஆர்.வேலாயுதம், பெரி யசாமி, பொன்னுசாமி, மு.து.செல்வ ராஜ், எஸ்.கே.சிவச்சந்திரன், வி.பிரபு, ஆறுமுகம், கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். குமாரபாளையம் அடுத்துள்ள வட்ட மலை எதிர் மேடு பகுதியில், அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன் றியத் தலைவர் கோவிந்தசாமி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சி.துரைசாமி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லி பாபு, மாநிலச் செயலாளர் விஜயமுரு கன், மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து, தாலுகாச் செயலாளர் மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட வேதகாரன் குட்டை, கள்ளிமடைக் குட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற, ஒன்றிய பட் ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில், திர ளான விவசாயிகள் கலந்து கொண்ட னர்.
மலைவாழ் மக்கள் சங்கம்
இதேபோன்று ஒன்றிய அரசின் பட் ஜெட்டை கண்டித்து, நாமக்கல், முள் ளுக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் நாம கிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ. பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன் றிய நிர்வாகிகள் மணிகண்டன், செல் வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.சின்னு சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் முன் னாள் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மலைவாழ் மக்கள் சங்க ஒன்றியத் தலை வர் சுப்பிரமணி, நிர்வாகி ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.