நாமக்கல், ஏப்.8- இந்தியா கூட்டணி தேர்தல் ஊழியர்கள் கூட்டத்தில், பகுதி வாரியாக வாக்குசேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தாலுகா, பள்ளி பாளையம் ஒன்றியம், படைவீடு, கவுண்டனூர், சாமானூர், இந்திராநகர், பல்லக்காபாளையம், அல்லிநாயக்கன்பா ளையம், ஆகிய கிளைகளை உள்ளடக்கிய தேர்தல் ஊழி யர் கூட்டம் படைவீடு பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், ஒன்றியத்தை ஆளும் மக்கள் விரோத பாசிச பாஜக அரசை ஆட்சி கட்டிலில் இருந்து கீழே இறக்கிட, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண் டும். அதற்கு பகுதி வாரியாக பிரச்சாரம் செய்து, வாக்குசேக ரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சி நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.