கோவை, செப்.26- வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங் கிட வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட 5 ஆவது மாநாடு தோழர் ஆர்.மணிவண்ணன் அரங்கத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாசேதுங் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பி னர் வி.சுந்தரமூர்த்தி கொடியேற்றி னார். தேசியக்குழு உறுப்பினர் மு. ஆனந்தன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கோபால்சங்கர் முன்வைத்தார். “அர சியல் அமைப்பு சட்டமும், மாண்பு களும்” என்ற தலைப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோதண்டம் உரை யாற்றினார். வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வழக்கறிஞர்க ளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நிரந்தர மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வர வேண்டும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் 2021-ஐ உடனே அமல்படுத்த வேண் டும். இளம் வழக்கறிஞர் உதவித் தொகையை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் மாவட்டத் தலைவ ராக என்.ராமர், செயலாளராக ஜோதிக் குமார், பொருளாளராக சுப்பிரமணி யன் உள்ளிட்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம் உரையாற் றினார்.